Don't Miss!
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- News ஒரே காரில் 4 ஆண்களுடன் இளம்பெண் பயணம்.. குமரி போலீஸ் கேட்ட கேள்வி.. கேரள இளைஞர்கள் கடும் வாக்குவாதம்
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது எப்படி? … மூன்றாவது கண் பாருங்க
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆஸ்கார் விருது கிடைக்க காரணம் மலேஷியாவில் இருக்கும் ஒரு சக்தி வாய்ந்த தர்காதான் என்கிறார் நடிகர் பாண்டு. வேந்தர் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினந்தோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் "மூன்றாவது கண்" நிகழ்ச்சியில் இதனை பகிர்ந்து கொண்டுள்ளார். நமது ஐம்புலன்களால் உணரமுடியாத, நம்மால் புரிந்துகொள்ளமுடியாத, அறிவியலுக்கு அப்பாற்பட்ட அமானுஷ்யங்களை தேடும் பயணம்தான் மூன்றாவது கண்.
திருப்பதி மலையில் இருக்கும் மூலவர் சிலை, வேற்று கிரகத்திலிருந்து வந்த ஒரு பொருள் என்பதை திருமலையின் தலைமை அர்ச்சகரான டாக்டர் ரமண தீட்சிதர் இந்த நிகழ்ச்சியில் சொல்லியிருந்தார். திருப்பதிக்கு அடிக்கடி போய் வரும் பக்தர்கள் கூட இந்த வியப்பான செய்தியை கேள்விப்பட்ட ஆச்சரியமடைந்தார்கள்.
அதேபோல், போகர் பிரதிஷ்டை செய்த பழனி நவபாஷாண சிலை தற்போது, சேதமடைந்து விட்டது. ஆனால், இதேபோல் இன்னொரு சிலையை போகர் செய்து பழனிமலை பகுதியில் மறைத்து வைத்திருப்பதாக சில குறிப்புகளை வைத்துக்கொண்டு, அந்த காட்டுப்பகுதிகளுக்கெல்லாம், மூன்றாவது கண் குழு ஒரு தேடுதல் வேட்டையை நடத்தியது.
போகர் சிலை செய்த போகர்கெஜத்திற்கு போய் பூஜை செய்தால் மழை வரும் என்று அங்கிருந்த மக்கள் சொல்லியபடி, மழை வந்த அதிசயம் பார்த்தவர்களை பிரமிக்க வைத்தது.
பழனி சித்தர்கள்
பழனி மலை அடிவாரத்தில் ஏராளமான பக்தர்களால் வணங்கப்படும் சாக்கடை சித்தர், சென்னையில் அடித்து ஆசிகூறும் சிகரெட் சித்தர், வேலூர் பஸ் ஸ்டேண்டில் கடவுள் சிலைக்கு போடுவதுபோல் பூவால் அர்ச்சனை செய்து வழிபடப்படும் பஸ் ஸ்டேண்ட் பாபா இப்படி பலரும் நிகழ்த்தும் அதிசயங்களை மூன்றாவது கண் நிகழ்ச்சி பதிவு செய்து ஒளிபரப்பி வருகிறது.
110 வயது பெண் துறவி
சமீபத்தில் பிரான்சில் இருந்து சில சாமியார்கள் தமிழகத்திற்கு வந்து ஒரு 110 வயது பெண் துறவியை சந்தித்து ஆசி பெற்றார்கள். இங்கே ராஜபாளையத்தில் இருந்தபடியே, பிரான்சில் வசிப்பவர்களின் புற்றுநோயை குணப்படுத்தியிருக்கார் அந்த பெண்துறவி. சமீபத்தில் மூன்றாவது கண் நிகழ்ச்சியில் வெளியான தகவல்கள் பெரும் வரவேற்பினை பெற்றது.
வெள்ளியங்கிரி மலை
ஊடகங்கள் பயணிக்காத வெள்ளியங்கிரி மலைக்கு முதன்முறையாக நமது மூன்றாவது கண் டீம் பயணம் செய்து வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் பிரத்யேகமாக ஒளிபரப்பிக்கொண்டிருக்கிறது. இதில் இந்த வாரம், வெள்ளியங்கிரி மலையில் இன்றும் சித்தர்களின் நடமாட்டம் இருக்கிறது. இதை உணர சில அனுபவமுள்ளவர்கள் சில அறிகுறிகளை சொல்கிறார்கள்.
அதன்படி வெள்ளியங்கரி மலை பயணம் செய்த நமது மூன்றாவது கண் டீமிற்கு, ஓர் அமானுஷ்ய அனுபவம் வீடியோ ஆதாரமாக கிடைத்திருக்கிறது. வெள்ளியங்கிரி மலையில் பஞ்சவாத்திய சத்தங்களான, பிரணவ ஒலி, மணியோசை, சிகண்டி ஒலி ஒரு குறிப்பிட்ட நேரத்தில் கேட்கும் என்று சொல்லியிருந்தார்கள். அப்படி ஒரு அமானுஷ்யம் நம்மாலயும் கேட்க முடிஞ்சது. அந்த அமானுஷ்ய ஒலி எப்படி இங்கே கேட்குதுன்னு யாராலயும் விளக்கமுடியாத அதிசயம், இந்த வாரம் வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணிக்கு இதை நீங்களும் பார்க்கலாம்.
அமானுஷ்யங்களைத் தேடி
தமிழகம் மட்டுமின்றி, அமானுஷ்யங்களை தேடி எல்லா திசைகளிலும் மூன்றாவது கண் டீம் பயணித்துக்கொண்டிருக்கிறது. வரும் வாரம் பிரபலங்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட அமானுஷ்ய அனுபவங்கள் நிச்சயம் உங்களை பிரமிக்க வைக்கும்.
நடிகர் பாண்டு
சினிமா காமெடி நடிகர் பாண்டு நம்மோட மூன்றாவது கண் நிகழ்ச்சியை பார்த்துட்டு, போன் பண்ணியிருந்தாரு. அடையாறுல சித்தர்கள் வழிபடும் பாலாகுட்டி ஒரு இளைஞர் மேல வந்து சிறுமியோட குரல்ல பேசறாங்க. இதை பார்த்துட்டு நடிகர் பாண்டு தன் குடும்பத்தோட இந்த பாலாகுட்டி இருக்கிற இடத்துக்கு போகவே அங்கே சில அதிசயங்கள் நடந்தது. அதனை மூன்றாவது கண் நிகழ்ச்சியில் ஒளிபரப்பியிருந்தனர்.
மலேசியா தர்கா
இப்போது இன்னொரு புது தகவலோட மீண்டும் நடிகர் பாண்டு மூன்றாவது கண் நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார். பாண்டு மலேஷியாவுல இருக்கிற ஒரு தர்காவுக்கு அடிக்கடி போய் வந்துட்டு இருக்காரு . சில வருஷங்களுக்கு முன்னால, இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் குடும்பத்தை, மலேஷியாவுல இருக்கிற ஒரு பவர்புல்லான தர்காவுக்கு தான் அழைச்சிட்டு போன அனுபவங்களை இதுல சொல்லியிருக்காரு.
ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆஸ்கார்
இந்த தர்காவுக்கு போனதுல இருந்துதான், ஏஆர் ரகுமானுக்கு ஆஸ்கார் கிடைச்சிருக்கு அப்படின்னும், இப்போ அடிக்கடி ஏஆர் ரகுமான் இந்த தர்காவுக்கு போறதை எல்லாம் நம்ம நிகழ்ச்சியில விவரிச்சிருக்காரு. அந்த தர்காவோட அமானுஷ்யங்களும், இதே தர்காவுக்கு போய் வரும் தமிழ் சினிமா பிரபலங்களை பத்தியும் இந்த வாரம் மூன்றாவது கண் நிகழ்ச்சியில் பார்க்கலாம்.
சினிமா நடிகர் சிங்கமுத்து
காமெடி நடிகர் சிங்கமுத்து, இந்த வார மூன்றாவது கண் நிகழ்ச்சியில் தன்னுடைய அனுபவத்தை பதிவு செய்திருக்கிறார். தான் சித்தர்களை வழிபடுவதில்லை. 63 நாயன்மார்களோட ஒவ்வொரு பதிகமும், ஒவ்வொரு காரியசித்திக்கானது. அப்படி ஒரு பதிகம் பாடித்தான் சினிமா வாய்ப்பே தனக்கு கிடைத்தது என்றும் அதை நமக்கு பாடியும் காட்டியிருக்கார் நடிகர் சிங்கமுத்து. நீங்களும் சினிமா நடிகராக பாடவேண்டிய பதிகம் எதுன்னு நமக்கு சொல்லித்தருகிறார் நடிகர் சிங்கமுத்து.
நடிகர் டெல்லிகணேஷ்
தன்னோட வாழ்க்கையில பல அற்புதங்களை செஞ்ச ஒரு சாமியாரை பத்தி பலவிதமான அமானுஷ்யங்களை பதிவு செஞ்சிருக்காரு நடிகர் டெல்லி கணேஷ். எந்த நேரமும் காயத்ரி மந்திரத்தையே ஜெபிச்சிட்டு இருந்ததால, அந்த சாமியாரோட பேரே காயத்ரி சாமியார்னு ஆயிடுச்சுன்னு சொல்றாரு நடிகர் டெல்லி கணேஷ். இதுவரை யாரும் கேள்விப்பட்டிராத காயத்ரி சாமிகளின் அமானுஷ்ய சக்தி பற்றி விவரிக்கிறார் டெல்லி கணேஷ்.
ஐ.பி.எஸ் அதிகாரி நட்ராஜ்
முன்னாள் டிஜிபி, டிஎன்பிஎஸ்சி தலைவர் இப்படி பல முக்கியமான பொறுப்புகள்ல இருந்தவரு ஐபிஎஸ் அதிகாரி நட்ராஜ். இவர் தன்னோட வாழ்க்கையில் நடந்த அமானுஷ்ய அனுபவங்களை நம்மோட பகிர்ந்து கொள்கிறார்.
அமானுஷ்ய தகவல்கள்
இப்படி, இந்த வாரம் பிரபலங்களின் அமானுஷ்ய அனுபவங்களும், வெள்ளியங்கிரி மலை பயணத்தின் மூலம் மூன்றாவது கண் நிகழ்ச்சி உங்களை பிரமிக்க வைக்கும் அனுபவங்களை தரவிருக்கிறது இந்த நிகழ்ச்சி தினந்தோறும் திங்கள் முதல் வெள்ளி இரவு 9.30 மணிக்கு வேந்தர் டிவியில் ஒளிபரப்பாகிறது.