Don't Miss!
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம், இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- News கட்சியையே உடைக்கும் அளவிற்கு கோபம்.. வேலையை தொடங்கிய முக்கிய புள்ளி.. ஆட்டம் காணும் "அந்த" கட்சி?
- Lifestyle இந்த 4 ராசி பெண்கள் காதலில் ரொம்ப அதிர்ஷ்டசாலிகளாம்... இவங்க காதல் வாழ்க்கை நினைச்சதை விட சூப்பரா இருக்குமாம்!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
‘மானாட மயிலாட’ மனதிற்கு உற்சாகம் தருகிறது – நமீதா
தமிழ் சினிமாவில் தன் கவர்ச்சியான நடிப்பால் கலக்கி அதனால் எக்கச்சக்க ரசிகர்களை தக்கவைத்திருக்கும் நமீதா மானாட மயிலாட நிகழ்ச்சியில் ஜட்ஜ் ஆக வந்து பல்வேறு இளம் நடனக் கலைஞர்களையும் ஊக்கப்படுத்தி வருகிறார். அவர் பேசும் கொஞ்சும் தமிழை கேட்பதற்காகவே ஒரு ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தனது சின்னத்திரை பயணம் குறித்து அவர் சொல்வதை படியுங்களேன்.
'மானாட மயிலாட' ஒரு வெற்றிகரமான நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சி மூலமாக பாராட்டுகிற வேலையை நான் செய்து வருகிறேன்.இதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால்,நடனத்தை சரியாகப் புரிந்து கொண்டவர்கள், ரசிக்க தெரிந்தவர்கள் அதைப் பார்த்து பாராட்டும் போது, போட்டியாளர்களுக்கும், அந்த நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்களுக்கும் இன்னும் கூடுதல் உற்சாகம் கிடைக்கிறது.
சினிமாவை தவிர இன்று எனக்கு கிடைத்திருக்கும் ரசிகர் பட்டாளத்தில் பெரும்பாலானவர்கள் சின்னத்திரை மூலம் கிடைத்தவர்கள்தான்.அடித்தட்டு மக்கள் வரை போய்ச் சேருகிற சாதனமாக இன்று சின்னத்திரை இருக்கிறது. ரசிகர்களின் இடத்திற்கே சென்று, அவர்களைச் சந்திப்பது என்பது சின்னத்திரை மூலம்தான் முடியும்.
வட இந்திய நடிகர்கள்தான் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு போட்டியாளர்களையும்,ரசிகர்களையும் உற்சாகப்படுத்துவார்கள்.
தென்னிந்தியாவில் இந்த வேலையை முதலில் நான் இறங்கி செய்ததால் எனக்கு நடிப்பதில் கிடைக்கிற திருப்தியை விடவும் அதிகமாக "மானாட மயிலாட' மூலம் கிடைக்கிறது. தற்போது என்னைத் தொடர்ந்து இதுபோன்ற நிகழ்ச்சிகளில் குஷ்பு, பூஜா,ரம்பா, ஆகி யோர்களும் கலந்துகொண்டு வருகிறார்கள். சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதால் நடிகைகளுக்கு மார்க்கெட் போய்விடும் என்பதை நான் உடைத்திருக்கிறேன். மானாட மயிலாட நிகழ்ச்சி என்னுடைய மனதிற்கு நிறைவையும், குதூகலத்தையும் கொடுக்கிறது.
என்னை நம்பி எடுக்கப்படுகிற படங்களுக்கு ரசிகர்களின் ஆதரவு நிச்சயம் இருக்கிறது.அதனால் என்னுடைய ரசிகர்கள் எதை விரும்புவார்கள்?என்று யோசித்து,அதற்கேற்றவாறு கதைகளைத் தேர்ந்தெடுக்கிறேன். தயாரிப்பாளர்களும் இந்த விஷயத்தைப் புரிந்து வைத்திருப்பதால்தான் எனக்கேற்ற கதைகளைத் தேர்வு செய்துகொண்டு வந்து என்னை அணுகுகிறார்கள். எனக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள் எனக்கு அமைந்தால் தொடர்ந்து நடிப்பேன்.ஏனெனில்,என்னை வைத்து படமெடுக்கும் தயாரிப்பாளர்கள் என்னால் நஷ்டமடையக்கூடாது! என்று பரந்த மனதோடு கூறி ட்ரேட் மார்க் சிரிப்பை உதிர்த்தார் நமீதா.