Don't Miss!
- Finance இறந்தவர் திரும்பி வந்த அதிசயம்.. பில்லியனரின் தில்லாங்கடி வேலை.. காதலியுடன் ரகசிய வாழ்க்கை..!
- News ஆட்களை செட் பண்ணி பணம் சப்ளை..ப்ளான் போட்டதே அவங்க தான்.! அண்ணாமலையா? படக்கென பேசிய வானதி சீனிவாசன்!
- Lifestyle குரு பகவானால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- Technology எகிறியது மவுசு.. ரூ.5000 டிஸ்கவுண்ட் உடன்.. மீண்டும் விற்பனைக்கு வந்த Motorola போன்.. என்ன மாடல்?
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஏ... முத்தழகு மார்க்க பாத்து போடுபுள்ள....
குஷ்பு, ரம்பா, நமீதா, மீனா வரிசையில் நடன நிகழ்ச்சியின் நடுவராக சின்னத்திரைக்கு வந்துள்ளார் முத்தழகு பிரியாமணி. விஜய் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகி வரும் புதிய நடன நிகழ்ச்சியா கிங் ஆஃப் டான்ஸ் நடன நிகழ்ச்சியின் நடுவராகியிருக்கிறார் பிரியாமணி.
பாரதிராஜா இயக்கிய கண்களால் கைது செய் படத்தில் அறிமுகமானவர் பிரியாமணி. பாலு மகேந்திரா படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தாலும், அவரை அடையாளம் காட்டியது என்னவோ பருத்திவீரன் முத்தழகுதான். சிறந்தநடிகைக்காக தேசிய விருது வாங்கும் அளவிற்கு திறமையான நடிகையாக இருந்தாலும் சரியான வாய்ப்புகள் அமையவில்லை.
கவர்ச்சியாக நடித்தும் வாய்ப்புகள் வராத காரணத்தால் குத்துப்பாட்டுக்கு ஆடி காலத்தை ஓட்டினார். தமிழில் கடந்த 2012ம் ஆண்டு நடித்த சாருலதா திரைப்படம்தான் தமிழில் அவர் கடைசியாக நடித்தது. சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஷாருக்கானுடன் குத்துப்பாட்டுக்கு ஆடினார்.
மலையாள, கன்னட தொலைக்காட்சிகளில் நடன நிகழ்ச்சியின் நடுவாராக இருந்த பிரியாமணியை விஜய் டிவிக்கு அழைத்து வந்து விட்டனர். இன்னும் சிலவாரங்களில் ஒளிபரப்பாக உள்ள 'கிங் ஆப் டான்ஸ்' என்ற நிகழ்ச்சியின் நடுவராக அமர்ந்து மார்க் பாடப்போகிறாராம் பிரியாமணி.
விஜய் டிவியில் ஜோடி நம்பர் 1 என்ற நடனநிகழ்ச்சியில் ராதா, சங்கீதா, பூர்ணிமா ஜெயராம், அம்பிகா ஆகியோர் நடுவராக இருந்தனர். இப்போது புதிய நிகழ்ச்சியான கிங் ஆப் டான்ஸ் நிகழ்ச்சியின் நடுவராகியிருக்கிறார் பிரியாமணி.
இந்த நடன நிகழ்ச்சியை சரவணன் மீனாட்சி கவின், கல்யாணம் முதல் காதல் வரை பிரியா ஆகியோர் தொகுத்து வழங்குகின்றனர். இந்த நடனநிகழ்ச்சி கடந்த ஜனவரி 30ம் தேதி முதல் ஒளிபரப்பாகத் தொடங்கியுள்ளது.
உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சியைப் போல கிங் ஆப் டான்ஸ் நிகழ்ச்சியும் ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கலாம். ஆரம்பமே அமர்களம் என்பதைப்போல கவின், பிரியாவின் கலக்கலான தொகுப்புடன் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை ஒளிபரப்பாகிறது கிங் ஆப் டான்ஸ். நம்ம முத்தழகு வர்றாக பார்த்து ரசிங்க.