Don't Miss!
- Automobiles நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
- Finance 290% லாபம் தந்த கட்டுமான நிறுவனம்.. விஜய் கேடியா விற்பனை செய்த பங்குகளை வாங்கலாமா..!!
- News ஆட்களை செட் பண்ணி பணம் சப்ளை..ப்ளான் போட்டதே அவங்க தான்.! அண்ணாமலையா? படக்கென பேசிய வானதி சீனிவாசன்!
- Lifestyle குரு பகவானால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- Technology எகிறியது மவுசு.. ரூ.5000 டிஸ்கவுண்ட் உடன்.. மீண்டும் விற்பனைக்கு வந்த Motorola போன்.. என்ன மாடல்?
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இந்த அப்பா பெண்ணை கொஞ்சம் பாருங்களேன்!
சில விளம்பரங்களைப் பார்த்தால் உடனே சேனல் மாற்றத் தோன்றும்... சில விளம்பரங்கள் வைத்த கண் வைக்காமல் பார்க்க வைக்கும். நம்ம அண்ணாச்சிக்கடை சரவணா ஸ்டோர் விளம்பரமும் கவித்துவமாக எடுக்கப்பட்டுள்ளது.
சரத்குமாரும் அவரது மகள் வரலட்சுமியும் நடித்துள்ள இந்த விளம்பரம் பெண்ணைப் பெற்ற அப்பாக்களுக்கு பிடித்தமானதாக மாறியுள்ளது.
எடுத்துக்கோ எடுத்துக்கோ
சரவணா ஸ்டோர் ஜவுளிக்கடை விளம்பரம் என்றாலே கதாநாயகிகளின் குத்தாட்டம்தான் மெயின் ஐயிட்டமாக இருக்கும். அதுவும் அக்கா சிநேகா வந்து எடுத்துக்கோ எடுத்துக்கோ அண்ணாச்சிக்கடையில் எடுத்துக்கோ என்று கூவி கூவி விற்பார்.
சரத் - வரலட்சுமி
ஆனால் இந்த விளம்பரமோ... பெண் குழந்தையைப் பெற்ற தகப்பனின் பொறுப்பை உணர்த்துகிறது. இதில் அப்பாவாக சரத்குமாரும் மகளாக அவரது சொந்த மகள் வரலட்சுமி நடித்துள்ளார்.
என்னா ஒரு கம்பீரம்
இதுநாள் வரை பனியன், வேஷ்டி என விளம்பரப்படங்களில் நடித்துள்ள சரத்குமார் இதில் ஒரு கம்பீரமான அப்பாவாக நடித்துள்ளார்.
பட்டுப்புடவையில் மகள்
பாவாடை சட்டையில்... தாவணியில் பார்த்து சந்தோசப்பட்ட மகளை திடீரென மணக்கோலத்தில் அதுவும் பட்டுப்புடவையில் பார்த்து பரவசப்படும் தந்தையாய் சரத் குமார் அசத்தியுள்ளார்.
விளம்பர வாரிசுகள்
விஜய் - ஷோபா நகை விளம்பரம் போல சரத் - வரலட்சுமியின் அண்ணாச்சி கடை விளம்பரம் ரசிகர்களை கவர்ந்துள்ளதாம். ஆனால் இதை வைத்து பட்டுப்புடவை எடுக்கப் போவார்களா என்றால் அது எனக்குத் தெரியாது!.