Don't Miss!
- Finance ஏப்ரல் 19: உலகிலேயே காஸ்ட்லியான தேர்தல் இந்தியாவில் நடக்கிறது.. தலைசுத்தவைக்கும் பட்ஜெட்..!
- Sports PBKS vs MI : நம்ம ஹர்சல் படேலா இது.. கடைசி 5 ஓவரில் 5 விக்கெட்ஸ்.. மும்பையை கலங்கடித்த பஞ்சாப்!
- Lifestyle இனிமே மாம்பழ தோலை தூக்கி எறியாம.. இப்படி டீ செஞ்சு குடிங்க.. இருமடங்கு நன்மை கிடைக்கும்...
- Automobiles தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
- Technology UPI கெடு முடிந்தது.. Paytm யூசர்கள் உடனே இதை பண்ணுங்க.. NPCI கொடுத்த அப்ரூவல்.. இனி எஸ்பிஐ, எச்டிஎப்சிதான்!
- News சென்னை பயணிகள் கவனத்துக்கு.. நாளை மெட்ரோ ரயில் நேரத்தில் மாற்றம்.. தேர்தலையொட்டி மேஜர் அறிவிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஆபாசம், அருவெறுப்பின் உச்சம் தொட்டு ஷாக் கொடுத்த விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி!
சென்னை: தமிழ் சின்னத்திரை சீரியல்கள், தங்களது தரத்தை தாங்களே தாழ்த்திக்கொண்டு போவது தொடர் கதையாகிவருகிறது. ஓயாத அழுகை, பேயை காண்பித்து மூட நம்பிக்கையை தூண்டுவது போன்ற காட்சிகளோடு, ஓயாத இந்த சீரியல்கள், ஆபாசத்தின், அருவெறுப்பின் எல்லைகளையும் தொட்டுப் பயணிக்க தொடங்கியுள்ளது ஆபத்தான போக்கு.
பெயர் வாங்கிய சன் டிவி
நெடுந்தொடர்களுக்கு பெயர் பெற்றிருந்தது சன் டிவி. அதில் இருந்து மாறுபட்டு அழுகையை குறைத்து இளமை துடிப்போடு தொடர்களை ஒளிபரப்ப ஆரம்பித்ததும், விஜய் டிவி பெரும் வரவேற்பை பெற்றது. கனாக்கானும் காலங்கள், ஆபீஸ், சரவணன் மீனாட்சி (முதல் பகுதி) போன்ற பெயர் சொல்லும் சீரியல்கள் விஜய் டிவியை அலங்கரித்தன.
மாறுபட்ட விஜய் டிவி
விஜய் டிவி சீரியல்கள் வெற்றி பெற காரணம், அவை மற்ற தொலைக்காட்சி சீரியல்களில் இருந்து அதிலும் குறிப்பாக சன் டிவி சீரியல்களில் இருந்து மாறுபட்டு இருந்ததால்தான். சன் டிவியின் ஸ்டீரியோ டைப் சீரியல்களில் இருந்து ஒரு மாற்றாக விஜய் டிவி சீரியல்கள் பார்க்கப்பட்டன.
சன்டிவியில் குடும்ப சிக்கல்
சன் டிவி சீரியல்கள் பொதுவாக உறவுகளை மையப்படுத்தியே இருக்கும். அதிலும் குறிப்பாக மாமியார்-மருமகள், கணவன்-மனைவி, போன்ற உறவுச்சிக்கல்களையே அதிகம் கையாண்டன. ஆனால், விஜய் டிவியோ, டிரெண்டுக்கு ஏற்றாற்போல பிரண்ட்ஷிப் பிரச்சினைகளை கையில் எடுத்தது. அதுவே வெற்றிக்கு காரணமாக அமைந்தது.
விஜய் டிவியில் நட்பே பிரதானம்
உதாரணத்திற்கு, கனாக்கானும் காலங்கள் முழுமையாக, மறந்து போன பள்ளிக்கால நட்புகளையும், குறும்புகளையும், நகைச்சுவையோடு மனக்கண் முன்பு கொண்டுவர உதவியது. ஆபீஸ் சீரியல், அலுவலக நட்பு வட்டாரத்தை பிரதிபலித்தது. சரவணன்-மீனாட்சி, காதலை கவித்துவமாக மையப்படுத்தியது.
இயல்பானவை
விஜய் டிவி சீரியல்களில் பெரும்பாலும், மாமியார்-மருமகள் மற்றும் குடும்ப சதிகள் முன்னிலைப்படுத்தப்படாமல், மிகுந்த இயல்போடு இருந்தன. இதுதான் விஜய் டிவி சீரியல்கள் மாறுபட்டிருக்கவும், வெற்றி பெறவும் காரணமாக அமைந்தன.
ஆபாசம் கொப்பளிப்பு
ஆனால், சமீபகாலமாக விஜய் டிவி சீரியல் இயக்குநர்கள் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை... இயல்புக்கு மாறாக, ஆபாச காட்சிகளை திணிக்க ஆரம்பித்துள்ளது. 'கல்யாணம் முதல் காதல்வரை' என்ற சீரியலில் எப்படியெல்லாம் ஆபாசம் கொப்பளிக்கிறது என்பதே சமீபத்தில்தான் செய்தியில் பார்த்தோம். சன் டிவியின் தெய்வ மகள் சீரியலில் காண்பிக்கப்பட்ட ஆபாசமும் எடுத்து வைக்கப்பட்டது.
ஆபாசமும், அருவெறுப்பும்
நேற்றைய சரவணன் மீனாட்சி எபிசோட், அதையெல்லாம் தூக்கி சாப்பிட்டுவிட்டது. இது ஆபாசம் தாண்டிய அருவெறுப்பாக இருந்ததுதான் அபத்தம். மீனாட்சி கதாப்பாத்திரம் மட்டுமின்றி அதன் அம்மா கதாப்பாத்திரமும் டேமேஜ் செய்யப்பட்டது.
ஆடை மாற்றும் அறை
சந்தர்ப்ப சூழ்நிலையால், விருப்பமில்லாமலே, வேட்டையனும், மீனாட்சியும் திருமணம் செய்துவிட்டனர். இதனாலேயே, அவர்களுக்குள் 'எதுவும்' நடக்கவில்லை. நேற்றைய எபிசோடில், மீனாட்சி ஆடை மாற்றும் அறைக்குள் வேட்டையன் எதிர்பாராமல் போய்விடுகிறார். அவ்வளவுதான், அதை வைத்து, அண்ணாமலை ரஜினி மாதிரி புலம்ப ஆரம்பித்துவிட்டார் வேட்டையன்.
மச்சத்த பார்த்தாராம்
'அந்த காட்சியை' பார்த்ததால் வேட்டையன் கண்கள் கோணிக்கொள்கின்றனவாம். இதைப்பார்த்த மீனாட்சி, நீ பார்த்தியா.. என்று கேட்க, வேட்டையன் வெட்கத்தோடு இல்லை என்கிறார். ஆனால், கண் அப்படி மாறிப்போயிருப்பதை பார்த்து மீண்டும்.. மீண்டும்.. மீனாட்சி கேட்டுக்கொண்டேயிருக்க, ஆமா, பார்த்தேன். ஆனா முதுகுல இருந்த மச்சத்த மட்டும்தான் பார்த்தேன் என்று வெட்கப்பட்டுக் கொண்டே ஓடிவிடுகிறார் வேட்டையன்.
பார்த்துட்டியா.. முழுசா பார்த்துட்டியா
சரி அத்தோடு விடுவார்கள் என்று பார்த்தால், வயல் வெளியில் உட்கார்ந்திருக்கும் வேட்டையனை, அவனது தோழி மைனா தேடி வருகிறாள். ஏன் இப்படி இருக்கிறாய் என்று கேட்க அவளிடமும் பார்த்த விஷயத்தை சொல்லி பரவசமடைகிறார் வேட்டையன். இளம் பெண் கதாப்பாத்திரமான மைனா, வேட்டையனிடம் "பார்த்தியா.. முழுசா பார்த்துட்டியா.." என்று திரும்ப திரும்ப கேட்டு பார்வையாளர்களை நெளிய வைத்தார்.
கன்ட்ரி உட்
மைனாவிடம், வேட்டையன் சொன்னதுதான் அதில் டாப். ஆயிரங்கால் மண்டபத்துல உள்ள சிலையை மாதிரி இருந்தது என்று சொன்னாரே பார்க்கலாம். அது மட்டுமா, மீனாட்சி ஒரு 'கன்ட்ரி உட்' என்றதுடன் அதை டிரான்ஸ்லேசன் செய்து நாட்டு கட்டை என்று தெளிவுரையும் தந்தார். மைனா மீனாட்சியிடம் சென்று இதை அப்படியே சொல்லி அதை வைத்து கொஞ்ச நேரம் ஓட்டினார்கள். இன்றும், இதே எபிசோட் தொடரும் என்பதற்கு அறிகுறி தெரிகிறது.
தாயையும் விடவில்லை
இது ஆபாசம் என்றால், மீனாட்சி தாயை வைத்து ஒரு அருவெறுப்பும் அரங்கேறியது. மீனாட்சிக்கும் அவரது மூத்த சகோதரருக்கும் தாயாக வரும் கதாப்பாத்திரம் எந்த அளவுக்கு ஆபாசமாக சித்தரிக்கப்பட வேண்டுமோ அந்த அளவுக்கு சித்தரிக்கப்பட்டது. மீனாட்சியின் தந்தை, அவரின் மகன் வயதுள்ள வில்லன் கதாப்பாத்திரத்தை வீட்டுக்கு கூட்டி வந்து மீனாட்சி தாயிடம் காபி கொடுக்க சொல்கிறார்.
வாழ்ந்திருக்கான்யா..
மீனாட்சியின் தாயும், தந்தையும் கிச்சனில் பேசிக்கொண்டிருக்கும்போது, அந்த இளைஞன் கதாப்பாத்திரம் தனது நண்பர்களிடம் சொல்கிறது, "இவள (மீனாட்சியின் தாயை) தூரத்துல இருந்து பார்த்ததால சரியா தெரியல (!). பக்கத்துல வச்சி பார்த்தா, ப்பா.. வாழ்ந்திருக்கான்யா (கணவன்)" என்று கொச்சையாக பேசி சிரிக்கிறார்.
நல்ல பெருசா இருக்கு..
மீனாட்சியின் தந்தை பக்கத்தில் வந்து உட்கார்ந்து, என்னப்பா பேசிக்கொண்டிருந்தீர்கள் என்று கேட்கிறார். அதற்கு இந்த வீடு எவ்வளோ பெருசா இருக்கு என்று பேசிகிட்டு இருந்தோம் என்று மீனாட்சியின் தாயை இரட்டை அர்த்தத்தில் வர்ணிக்கிறார் அந்த இளைஞன். அதற்கு மீனாட்சியின் தந்தையும், ஆமாப்பா, வீட்டு சென்டரிங் எல்லாம் நல்ல தேக்கு மரம் என்று சொல்கிறார். அதை கேட்டு, இரட்டை அர்த்தம் எடுத்தபடி வில்லன் தனது நண்பர்களோடு நமட்டு சிரிப்பு சிரிக்கிறார்.
தாயையும், மகளையும் ஒரே நாளில்
ஒருபக்கம், மீனாட்சியை ஆபாசமாக காட்டிய சீரியல், அதேநாளில் மற்றொரு பக்கம் மீனாட்சி தாயை, அருவெறுப்பாக காண்பித்தது. இந்த சீரியல் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. எனவே, குழந்தைகள், பெரியவர்கள் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து இதை பார்க்கும் வாய்ப்பு அமைந்துவிடுகிறது. இதுபோன்ற சீரியலில் இந்த ஆபாசமும், அருவெறுப்பும் தேவையா பாஸ்?