Don't Miss!
- Finance ஸ்மார்ட் போன் வாங்கப் போறீங்களா? ரூ.60,000க்கு கீழ் கிடைக்கும் உயர்ரக பிராண்டட் போன்கள்..
- News தமிழ்நாட்டில் பாஜக வலுவாகிறது.. தேர்தல் முடிவுகள் ஆச்சரியத்தை ஏற்படுத்த போகிறது.. பிரதமர் மோடி
- Lifestyle இட்லி, தோசைக்கு ஒருமுறை இப்படி தக்காளியை குருமாவை செஞ்சு பாருங்க.. அடிக்கடி செய்வீங்க..
- Technology அதிரி புதிரி ஆர்டர்.. 66W சார்ஜிங்.. 64MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. ஆஃபரில் விவோ போன்.. எந்த மாடல்?
- Automobiles பேடிஎம் ஃபாஸ்ட் டேக் கார்டுகளை இப்பவும் பயன்படுத்த முடியுமா? அதுல இருக்குற பணத்தை எடுப்பது எப்படி?
- Sports சிஎஸ்கே அணியின் படுமோசமான கேப்டன்கள் பட்டியல்.. தோனி கேப்டனா இருக்க காரணமே இதுதான்
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
சினிமா பாடகரை சூப்பர் சிங்கராக தேர்வு செய்த விஜய் டிவி... 'இது மோசடி இல்லையா?'
தமிழில் ஒரு பிரமாண்டமான குரல் தேடல் என்ற பெயரில் நடைபெற்று வரும் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் போட்டியில், ஏற்கெனவே சில படங்களில் பின்னணி பாடிய ஒருவருக்கு முதல் பரிசு அளித்துள்ளது பலத்த சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
கடந்த 18ஆம் தேதி விஜய் டிவியின் சூப்பர் சிங்கர்-5 நிகழ்ச்சியின் இறுதிச்சுற்று பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையே நடந்தது.
இதில் பரீதா, ராஜகணபதி, சியாத், ஆனந்த் அரவிந்தாக்ஷன், லட்சுமி ஆகிய ஐந்து பேர் போட்டியிட்டார்கள்.
இவர்களில் பரீதா, ராஜகணபதி ஆகிய இருவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். ஆனந்த் அரவிந்தாக்ஷன், சியாத், லட்சுமி ஆகிய மூவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.
இந்தப் போட்டியில் பலரது எதிர்ப்பார்ப்புகளையும் தாண்டி கேரளாவின் அரவிந்தாக்ஷன் முதலிடத்தை வென்றார். இவருக்குத்தான் ரூ 75 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாகக் கிடைத்தது.
இப்போது இந்த ஆனந்த் அரவிந்தாக்ஷன் யார் என்ற விவரங்கள் வெளியாகியுள்ளன. இவர் ஒரு பின்னணிப் பாடகர். அவர் ஆரோகணம், நீர்ப்பறவை, 10 எண்றதுக்குள்ள, பாண்டிய நாடு, மதயானைக் கூட்டம், இவன் வேற மாதிரி உள்ளிட்ட பல படங்களுக்கு பாடல்கள் பாடியிருக்கிறார்.
புதிய குரல்களை அறிமுகப்படுத்தவே இந்தப் போட்டி என்று சொல்லிக் கொண்டு, ஏற்கெனவே அறிமுகமாகி பல படங்களில் பின்னணியும் பாடிய அரவிந்தாக்ஷனை விஜய் டிவி தேர்வு செய்திருப்பது மோசடிதானே? - என்று பலரும் இணையவெளியில் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.