Don't Miss!
- News சென்னையை அதிர வைத்த போலி நகையை அடகு வைக்கும் கும்பல்.. காரைக்குடியில் மொத்தமாக சிக்கியது எப்படி?
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சினிமா பாடகரை சூப்பர் சிங்கராக தேர்வு செய்த விஜய் டிவி... 'இது மோசடி இல்லையா?'
தமிழில் ஒரு பிரமாண்டமான குரல் தேடல் என்ற பெயரில் நடைபெற்று வரும் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் போட்டியில், ஏற்கெனவே சில படங்களில் பின்னணி பாடிய ஒருவருக்கு முதல் பரிசு அளித்துள்ளது பலத்த சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
கடந்த 18ஆம் தேதி விஜய் டிவியின் சூப்பர் சிங்கர்-5 நிகழ்ச்சியின் இறுதிச்சுற்று பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையே நடந்தது.
இதில் பரீதா, ராஜகணபதி, சியாத், ஆனந்த் அரவிந்தாக்ஷன், லட்சுமி ஆகிய ஐந்து பேர் போட்டியிட்டார்கள்.
இவர்களில் பரீதா, ராஜகணபதி ஆகிய இருவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். ஆனந்த் அரவிந்தாக்ஷன், சியாத், லட்சுமி ஆகிய மூவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.
இந்தப் போட்டியில் பலரது எதிர்ப்பார்ப்புகளையும் தாண்டி கேரளாவின் அரவிந்தாக்ஷன் முதலிடத்தை வென்றார். இவருக்குத்தான் ரூ 75 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாகக் கிடைத்தது.
இப்போது இந்த ஆனந்த் அரவிந்தாக்ஷன் யார் என்ற விவரங்கள் வெளியாகியுள்ளன. இவர் ஒரு பின்னணிப் பாடகர். அவர் ஆரோகணம், நீர்ப்பறவை, 10 எண்றதுக்குள்ள, பாண்டிய நாடு, மதயானைக் கூட்டம், இவன் வேற மாதிரி உள்ளிட்ட பல படங்களுக்கு பாடல்கள் பாடியிருக்கிறார்.
புதிய குரல்களை அறிமுகப்படுத்தவே இந்தப் போட்டி என்று சொல்லிக் கொண்டு, ஏற்கெனவே அறிமுகமாகி பல படங்களில் பின்னணியும் பாடிய அரவிந்தாக்ஷனை விஜய் டிவி தேர்வு செய்திருப்பது மோசடிதானே? - என்று பலரும் இணையவெளியில் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.