Don't Miss!
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Automobiles பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- News நான் கேட்டது ‘அவள்’.. கடவுள் கொடுத்தது ‘அவல்’.. சரி சாப்டுட்டு வேற வேலையை பார்ப்போம்!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ஆனந்தயாழை பாடலை அடிக்கடி போட்டு ஆறுதல் தேடிய விஜய் டிவி
தென்னிந்திய ஃபிலிம்பேர் விருது விழாவில் சிறந்தபாடலாசியர் விருது நா.முத்துக்குமாருக்கும், சிறந்த பாடகர் விருது ஸ்ரீ ராம் பார்த்த சாரதிக்கும் கிடைத்தது.
இந்த விருது தங்க மீன்கள் படத்தில் வரும் ஆனந்த யாழை மீட்டுகிறாள்... பாடலுக்காக கிடைத்த விருது. இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பானது.
ஆனந்தயாழை மீட்டுகிறாள்…
விருதுக்காக நா.முத்துக்குமாரின் பெயரும், ஸ்ரீராம் பார்த்தசாரதியின் பெயரும் அறிவிக்கப்பட்ட நேரங்களில் எல்லாம் ஆனந்தயாழை மீட்டுகிறாள் பாடலைப்போட்டு இயக்குநர் ராமுக்கு ஆறுதல் சொன்னார்கள் விஜய் டிவியினர்.
ராமின் ஆதங்கம்
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் விஜய் விருது விழாவில் தங்க மீன்கள் படத்தின் ஆனந்தயாழை பாடலுக்கும், அந்த படத்தில் நடித்த சிறுமிக்கும் விருது கொடுக்கவில்லை என்று தனது ஆதங்கத்தை கொட்டினார்.
ஆறுதல் ஒளிபரப்பு
அந்த ஆதங்கத்திற்கு ஆறுதல் சொல்லும் விதமாக நேற்றைய தினம் பிலிம்பேர் விழாவை ஒளிபரப்பிய விஜய் டிவி ஆனந்த யாழை பாடலை அடிக்கடி ஒளிபரப்பியதோடு ராமின் முகத்தை அடிக்கடி காட்டினர்.
5 விருது வாங்கிய முத்துக்குமார்
ஆனந்தயாழை பாடலுக்காக தேசிய விருது, ஃபிலிம்பேர் விருது என 5 விருதுகளை பெற்றுள்ளதாக கூறினார் நா.முத்துக்குமார்.
பாடிக்காட்டிய பாடகர்
சிறந்த பாடலாசியருக்காக பரிசு வாங்கிய பாடகர் ஸ்ரீராம் பார்த்த சாரதி மேடையிலேயே அந்தப் பாடலைப் பாடிக்காட்டினார். அப்போது ராமின் முகத்தில் மலர்ந்த சந்தோசம் விருது வாங்கியதை விட அதிகமாகவே இருந்தது.