Don't Miss!
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
வாணி ராணி: புதைக்கப்பட்ட பூமிநாதன் இன்றைக்காவது வெளியே வருவாரா?
சென்னை: சவப்பெட்டிக்குள் வைத்து மண்ணில் புதைக்கப்பட்ட வாணியின் கணவர் பூமிநாதன் இன்றைக்காவது வெளியே வருவாரா என்று வாணி ராணி சீரியல் பார்க்கும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
ராணி பிராத்தனைக்கு பலன் கிடைக்கணும். எப்படியாவது பூமிநாதனை, வாணி காப்பத்தணும் என்று டுவிட்டரில் வேண்டுதல் வைக்கின்றனர் ரசிகர்கள்.
அதே சமயத்தில் சினிமா சீன்களை காப்பியடித்து சீரியலில் சீன் வைக்க ஆரம்பித்து விட்டார்களே என்று கிண்டலடிக்கின்றனர் வலைஞர்கள்.
ராதிகாவின் வாணி ராணி
சன்டிவியில் இரவு 9-30க்கு ஒளிபரப்பாகும் வாணி ராணி தொடரில் இப்போது திடீர் திருப்பங்களும், பரபரப்பு காட்சிகளும் ஒளிபரப்பாகி வருகிறது. வாணியின் கணவர் பூமிநாதனை சவப்பெட்டிக்குள் வைத்து உயிரோடு புதைத்து விட்டனர்.
தேடி அலையும் வாணி
கணவர் புதைக்கப்பட்ட இடத்தை தேடி அலைந்த வாணி ஒரு வழியாக பூமிநாதன் புதைக்கப்பட்ட இடத்தை கண்டுபிடித்து விட்டார். ஆம்புலன்ஸ், போலீஸ் சகிதமாக பூமிநாதனை காப்பாற்ற வந்து விட்டார் வாணி.
நாலு நாள் ஆச்சேப்பா
நாலு எபிசோடுகளாக இதேதான் போய்கொண்டிருக்கிறது. பூமிநாதனை சவப்பெட்டிக்குள் வைத்து புதைத்து நான்கு நாள் ஆகிவிட்டது. இன்றைக்காவது வெளியே வந்துவிடுவாரா பூமிநாதன் என்பதை கிரியேட்டிவ் ஹெட் ராதிகாதான் முடிவு செய்ய வேண்டும்.
|
கடவுளே காப்பாத்து
பூமிநாதனை எப்படியாவது காப்பாத்தணும், ராணி வேண்டுதல் பலிக்கணும் என்பது டுவிட்டர்வாசிகளின் கவலை.
எலி, பாம்பு வருதுப்பா
சவப்பெட்டிக்குள் படுத்திருக்கும் பூமிநாதனை பார்க்க எலி விசிட் அடிக்கிறது. அதைத் தொடர்ந்து பாம்பு புகுந்து பூமிநாதனில் மேல் எறி இறங்குகிறது எல்லாம் கிராபிக்ஸ்தான் என்றாலும் எப்படியோ ஓட்டை போட்டு பூமிநாதனை மூச்சு விட ஏற்பாடு செய்து விட்டார்கள்.
|
கணவரை காப்பாற்றிவிடுவாரா?
வாணி ராணியிலாவது தனது கணவரை ராதிகா காப்பாற்றி விடுவார் என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர் வலைஞர்கள்.
|
நாய்கள் ஜாக்கிரதை
ஹாலிவுட் படத்தில் இருந்து சீனை உருவி தமிழ் சினிமாவில் சேர்ப்பார்கள். ஆனால் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற நாய்கள் ஜாக்கிரதை படத்தில் வரும் சவப்பெட்டி காட்சியை வாணி ராணி சீரியலில் சீன் ஆக வைத்து விட்டனர் என்றும் வசை பாடுகின்றனர் வலைஞர்கள்.
பூமி வந்தா சரிதான்
எது எப்படியோ வாணி ராணி தொடரில் பூமிக்குள் புதைக்கப்பட்ட பூமிநாதனை இன்றைக்காவது வெளியே எடுத்தால் சரிதான். வெளியே வந்து விடுவாரா? பூமிநாதன்.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்