twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஐந்து சீரியல் பாரு அதிர்ஷ்டசாலி யாரு போட்டி!

    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் டிவி சீரியல் பார்க்கும் ரசிகர்களுக்கு அதிர்ஷ்ட பரிசுகள் காத்திருக்கின்றன.

    By Mayura Akilan
    |

    சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மெல்லத் திறந்தது கதவு, இனிய இரு மலர்கள், தலையணைப் பூக்கள், லட்சுமி வந்தாச்சு, டார்லிங் டார்லிங் என ஐந்து சீரியல்கள் ஒளிபரப்பாகின்றன.

    இந்த சீரியல் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்ற சீரியல்கள். சென்டிமென்ட், குடும்ப கதை, காமெடி கதை என பலதரப்பட்ட ரசிகர்களை கவரும் வகையில் சீரியல்களை ஒளிபரப்புகிறது ஜீ தமிழ் தொலைக்காட்சி.

    Zee Tamil TV Aindhu Serial Paru Athirstasali Yaru

    டிவி சீரியல் பார்க்கும் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் பரிசுமழையில் நனைய வைக்கப் போகிறது ஜீ தமிழ் டிவி. ஒவ்வொரு தொடரின் இறுதியிலும் ஒரு கேள்வி என நாள்தோறும் ஐந்து தொடர்களுக்கு மொத்தம் ஐந்து கேள்விகள் கேட்கப்படுகிறது.

    சரியாக விடையளிக்கும் அதிர்ஷ்டசாலிகளில், ஒரு தொடருக்கு ஒரு வெற்றியாளர் என ஐந்து வெற்றியாளர்களை தேர்வு செய்து தினமும் வீட்டு உபயோக பொருள்களை பரிசாக வழங்குகிறது, ஜீ தமிழ் தொலைக்காட்சி.

    தொடரின் இறுதியில் கேட்கப்படும் கேள்விக்கான விடையை 57575 என்ற எண்ணுக்கு குறுந்தகவல் மூலம் தெரிவிக்க வேண்டும். கைப்பேசியில் KeywordAnswer OptionNameAddress என்ற முறையில் பதில் அனுப்பவேண்டும்.

    நேயர்களே! ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொடர்களை கண்டு ரசித்து பரிசுகளை வெல்லுங்கள்.

    English summary
    Zee Tamil launches the exciting “Aindhu Serial Paru Athirstasali Yaru” Contest’
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X