சென்னை: நடிகை சமந்தாவின் வாழ்க்கை கடந்த சில மாதங்களாக முழுக்க முழுக்க மகிழ்ச்சியால் நிரம்பி வருகிறது. திருமணம், கர்ப்பம், பேபிமூன் ட்ரிப், குடும்ப கொண்டாட்டம் என ஒவ்வொரு தருணத்தையும் ரசிகர்களுடன் பகிர்ந்து வரும் சமந்தா, தற்போது கணவர் ராஜ் நிடிமோருவுடன் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றன.

Advertisement

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக தனக்கென தனி இடத்தை பிடித்த சமந்தா, சமீபத்தில் இயக்குநர் ராஜ் நிடிமோருவை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்கினார். திருமணத்திற்குப் பிறகு இருவரும் தங்களது குடும்ப வாழ்க்கையை மிகவும் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டாடி வருகின்றனர்.

Advertisement

அதிலும் குறிப்பாக, சமந்தா கர்ப்பமாக இருப்பதாக வெளியான தகவலுக்குப் பிறகு, இந்த ஜோடி பகிரும் ஒவ்வொரு புகைப்படமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. குழந்தையை வரவேற்கும் உற்சாகத்தில் இருக்கும் இருவரும், வாழ்க்கையின் ஒவ்வொரு அழகான தருணத்தையும் ரசித்து வாழ்ந்து வருவது அவர்களது சமூக வலைதள பதிவுகளிலேயே தெரிகிறது.

சில வாரங்களுக்கு முன்பு, கர்ப்ப காலத்தை கொண்டாடும் விதமாக இருவரும் தாய்லாந்துக்கு பேபிமூன் சுற்றுலா சென்றிருந்தனர். கடற்கரை, அழகிய ரிசார்ட்கள், சூரிய அஸ்தமன காட்சிகள் என இருவரும் ஒன்றாக செலவிட்ட ரொமான்டிக் தருணங்களின் புகைப்படங்களை ராஜ் நிடிமோரு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த புகைப்படங்கள் வெளியாகியதும், "நீண்ட நாட்களுக்குப் பிறகு சமந்தாவை இவ்வளவு சந்தோஷமாக பார்க்கிறோம்" என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வைரலாக்கினர். பேபிமூன் ட்ரிப் தொடர்பான அந்த செய்தியும் இணையத்தில் பல நாட்கள் பேசுபொருளாக இருந்தது.

Advertisement

கோயில் தரிசனம்: தற்போது வெளியாகியுள்ள புகைப்படத்தில், இளஞ்சிவப்பு நிற காட்டன் சேலையில் மிகவும் எளிமையாக காட்சியளிக்கும் சமந்தா, கருவறை முன்பு நின்றபடி கேமராவை பார்த்து சிரிக்கிறார். அருகில் வெள்ளை சட்டையில் ராஜ் நிடிமோரு சாமி தரிசனம் செய்து கொண்டிருக்கிறார்.

ரசிகர்கள் வாழ்த்து: இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், "அம்மாவாகப் போகும் சமந்தாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்", "இருவரும் இப்படியே சந்தோஷமாக இருக்கணும்", "இந்த புன்னகை எப்போதும் மாறக்கூடாது" என்று சமூக வலைதளங்களில் தொடர்ந்து வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.