Don't Miss!
- News நாங்க ஆகம விதி நிபுணர்கள் அல்ல.. பிடிஆர் தாயிடம் செங்கோல் தர எதிர்க்கும் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி
- Finance பெங்களூர் தண்ணீர் பஞ்சத்தில் இப்படியொரு பிரச்சனையா..? அதிர்ச்சியான விஷயம் தான்..!
- Automobiles ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
- Sports மும்பை இந்தியன்சின் ஏமாற்று வேலைக்கு இனி ஆப்பு.. புதிய நடைமுறையை கொண்டு வந்த ஐபிஎல் நிர்வாகம்
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கவிஞர் வாலிக்கு அண்ணா விருது: பையனூர் விழாவில் ராம.நாராயணன் வழங்கினார்
ஒவ்வொரு ஆண்டும் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் பேரறிஞர் அண்ணா விருது வழங்குவது வழக்கம். இந்த ஆண்டிற்கான விருதிற்கு கவிஞர் வாலி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சென்னை அருகே உள்ள பையனூரில் இந்த விருது வழங்கும் விழா சிறப்பாக நடந்தது. இதற்கு கலைஞானம் முன்னிலை வகித்தார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ராம.நாராயணன் கவிஞர் வாலிக்கு பேரறிஞர் அண்ணா விருதை வழங்கி கௌரவித்தார். இந்த விழாவில் பெப்சி' தலைவர் வி.சி.குகநாதன் கவிஞர் வாலியை வாழ்த்திப் பேசினார்.
மேலும், இதில் கவிஞர்கள் பூவை செங்குட்டுவன், மு.மேத்தா, காமகோடியன், யார் கண்ணன், நா.முத்துக்குமார், கபிலன், விவேகா, ஆண்டாள் பிரியதர்ஷினி தாமரை, வசனகர்த்தா லியாகத் அலிகான், ஆஞ்சனேயா புஷ்பானந்த், டி.துரைராஜ் ஆகியோர் கலந்துகொண்டு வாலியை வாழ்த்தி கவிதை மழை பொழிந்தனர்.
இதில் நடிகர்கள் சத்யராஜ், கரண், ராஜேஷ், நடிகை தேவயானி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். முன்னதாக வசனகர்த்தா கே.குணா வரவேற்புரை ஆற்றினார். இறுதியாக டைரக்டர் எழில் நன்றியுரை வாசித்தார்.