Don't Miss!
- News ஜனநாயக கடமை ஆற்ற முதல் ஆளாக வந்த நடிகர் அஜித்.. 30 நிமிடம் முன்பே வந்து காத்திருந்து ஓட்டு போட்டார்!
- Technology யாரு சாமி நீ.. UPI.. யூடியூப்.. சிங்கிள் சார்ஜில் 6 நாட்கள் பேட்டரி.. புதிய 4ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Sports தம்பி! உனக்கு இது தான் கடைசி வாய்ப்பு.. ரூ.14 கோடி வீரருக்கு நெருக்கடி.. காத்திருக்கும் ஆல்ரவுண்டர்
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஏ.ஆர். ரஹ்மானுக்கு இரண்டு கிராமி விருதுகள்!!
கடந்த ஆண்டு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து டேனி பாயில் இயக்கி வெளிவந்த ஸ்லம்டாக் மில்லினர் திரைப்படம் ஆஸ்கருக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. இதில் சிறந்த பாடல் ஜெய் ஹோ மற்றும் இசைக்காக 2 ஆஸ்கர் விருதுகள் ரகுமானுக்கு வழங்கப்பட்டது.
இதன்மூலம் தனிநபராக ஆஸ்கர் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை ஏர்.ஆர்.ரகுமான் பெற்றார். கடந்த ஆண்டு முழுவதும் பாராட்டு மழையில் நனைந்தார் ரஹ்மான்.
52வது கிராமி விருதுகளுக்கும் இரு பிரிவுகளில் அவரது பாடல் மற்றும் இசை பரிந்துரைக்கப்பட்டிருப்பதை ரஹ்மான் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டார்.
இந்த விருதுகள் கிடைக்கும் என்று நம்புவதாக அவர் கூறியிருந்தார். அவரது நம்பிக்கை வீண் போகவில்லை... இசைத்துறைக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான கிராமி இப்போது அவருக்குக் கிடைத்துள்ளது.
ஜெய் ஹோ பாடலின் சிறந்த இசைக்காக ஒரு விருதும், அந்தப் பாடலை எழுதிய கவிஞர் குல்சாருடன் இணைந்து மற்றொரு விருதும் அவருக்கு இப்போது வழங்கப்பட்டது. ஆஸ்கர் விருதும் இதே போல குல்சாருடன் இணைந்து வழங்கப்பட்டகது குறிப்பிடத்தக்கது.
இந்த விருது விழாவுக்கு நேரில் சென்றிருந்த ரஹ்மான், விருதுகளைப் பெற்றுக் கொண்டார்.
இந்த விருதின் மூலம், கிராமி விருது வென்ற இந்தியக் கலைஞர்கள் பண்டிட் ரவிஷங்கர், ஜாகிர் உசைன்,விக்கு வினாயக் மற்றுவம் விஸ்வமோகன் பட் வரிசையில் இடம்பெறுகிறார் ரஹ்மான்.
சமீபத்தில்தான் ரஹ்மானுக்கு மத்திய அரசு பத்மபூஷன் விருது வழங்கி கவுரவித்தது.
இந்த ஆண்டு நடக்கும் ஆஸ்கர் விருதுகளில் ஒரு பிரிவில் சிறந்த இசைக்காக ரஹ்மான் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரஹ்மான் வீட்டில் ரசிகர்கள் கொண்டாட்டம்:
ஏ.ஆர். ரஹ்மானுக்கு 2 கிராமி விருதுகள் கிடைத்த தகவல் பரவியதும் அவரது வீட்டில் பெருமளவில் ரசிகர்கள் குவிந்து விட்டனர்.
கோடம்பாக்கத்தில் உள்ள ஏ.ஆர்.ரகுமான் வீட்டில் ஆண் - பெண் ரசிகர்கள் ஆயிரக்கணக்கானோர் இன்று அதிகாலையில் கூடினார்கள். ரஹ்மானின் இசைக்கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவிகளும் அங்கு திரண்டனர். ரஹ்மானின் பாடல்களை ஆடிப் பாடினார்கள்.
பின்னர் வீட்டுக்கு வெளியே பட்டாசுகளை வெடித்தனர். அந்தப் பகுதியே திருவிழாக் கோலமாகி விட்டது. ரஹ்மானின் சகோதரி பாத்திமா, அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்.
பின்னர் அவர் கூறுகையில், இன்று காலை 6.30 மணிக்கு என் தாயார் டெலிபோனில் தொடர்பு கொண்டு கிராமி விருதுகள் கிடைத்த தகவலை சொன்னார். எங்கள் மகிழ்ச்சி தொடர்ந்து கொண்டு இருக்கிறது என்றார்.
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?