Don't Miss!
- News 75 ஆடுகள்.. நாகப்பட்டினம் நாகராஜ் நொந்து போயிட்டாரு.. அதென்ன லாரிக்கு அடியிலேயே தொங்குதே.. அட கடவுளே
- Lifestyle உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. வருகிற ஏப்ரல் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
- Automobiles சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
'சிவாஜி'க்கு விருது- குஷியில் சின்மயி!
சிவாஜி படத்தில் இடம் பெற்ற சஹானா தூரல் தூவுதோ என்ற பாடலைப் பாடியவர் சின்மயி. சூப்பர் ஹிட் பாடலான இந்தப் பாட்டுக்காக, அவருக்கு தமிழக அரசின் சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருது கிடைத்துள்ளது.
இந்த விருது குறித்து சின்மயி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், விருது பெற்றுத் தந்தப் பாடலை எனக்காகக் கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து பணியாற்றியதால் ஆசிர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன்.
ரஹ்மான் சாருடன் இணைந்து பணியாற்றுவது எப்போதுமே ஒரு புனிதமான அனுபவம் என்றார் சின்மயி. கன்னத்தில் முத்தமிட்டால் படம்தான் சின்மயி திரைப்படங்களில் பாடிய முதல் படமாகும். 2002ல் வெளியான அந்தப் படத்தில் பாடி அறிமுகமான சின்மயி பல பிரபலமான பாடல்களைப் பாடியுள்ளார்.
24 வயதாகும் சின்மயி, முதன் முதலில் ஏ.ஆர்.ரஹ்மானை சந்தித்தபோது பிளஸ்டூ படித்துக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாடல் மட்டுமல்லாமல் டப்பிங், டிவி ஷோக்களை நடத்துவது, சொந்த நிறுவனத்தை நிர்வகிப்பது, சாரங்கி கலையில் நிபுணத்துவும் என பன்முகம் கொண்டவர் சின்மயி என்பது குறிப்பிடத்தக்கது.