twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    குடியரசுத் தலைவரிடமிருந்து பத்மபூஷன் விருது பெற்றார் இளையராஜா!

    By Staff
    |

    Ilayaraja
    டெல்லி: நாட்டின் மிக உயர்ந்த சிவிலியன் விருதுகளில் மூன்றாவது பெரிய பத்மபூஷன் விருதினை இன்று நேரில் பெற்றார் இசைஞானி இளையராஜா.

    இந்தியாவின் மிகச் சிறந்த இசையமைப்பாளர்களான இசைஞானி இளையராஜா மற்று ஏர் ஆர் ரஹ்மான் உள்ளிட்டோருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி, சில தினங்களுக்கு முன் டெல்லியில் நடந்த பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் நேரில் போய் விருதினைப் பெற்றார் ஏஆர் ரஹ்மான்.

    இளையராஜா பிறிதொரு நாளில் வாங்கிக் கொள்வதாக கூறிவிட்டதால், அவருக்கும் மேலும் சில கலைஞர்களுக்கும் இன்று பத்ம விருதுகள் வழங்கப்பட்டன.

    டெல்லியில் இன்று நடந்த விழாவில் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலிடம் பத்மபூஷன் விருதினைப் பெற்றுக் கொண்டார் இளையராஜா.

    இந்த கௌரவத்தை அளித்த இந்திய அரசுக்கு அனைத்துக் கலைஞர்கள் சார்பாகவும் நன்றி கூறுவதாகத் தெரிவித்தார் இளையராஜா.

    இந்தி நடிகை ரேகா, நடிகர் சோயப் அலிகான் உள்ளிட்ட கலைஞர்களுக்கு இன்றைய விழாவில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X