Don't Miss!
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Finance டீ கடையில் கூட இப்ப கிரெடிட் கார்டு பேமெண்ட் தான்.. ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை..!
- News 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்: கர்நாடகா, கேரளா உட்பட் 13 மாநிலங்கள்- 88 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Technology இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நார்வே திரைப்பட விழா-நந்தலாலாவுக்கு விருது!
நந்தலாலா படத்தை அய்ங்கரன் நிறுவனம் தயாரித்திருந்தது. பல்வேறு காரணங்களால் இந்தப் படம் இன்னும் வெளியாகாமல் உள்ளது.
இந்த நிலையில், வசீகரன் சிவலிங்கத்தின் விஎன் மியூசிக் ட்ரீம்ஸ் சார்பில் நார்வேயில் நடந்த சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் நந்தலாலா பங்கேற்றது.
இந்தப் படத்துடன் மேலும் 12 தமிழ்ப் படங்களும் பங்கேற்றன. படத்தை இயக்கிய மிஷ்கின் மற்றும் முன்னணி தமிழ்ப்பட இயக்குநர்கள் எஸ்பி ஜனநாதன், சசிகுமார், சமுத்திரக்கனி ஆகியோரும் விழாவுக்கு சென்றிருந்தனர்.
கடந்த பிப்ரவரி 6ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடந்த இந்த விழாவுக்கு ஏராளமான ரசிகர்கள் ஆர்வத்துடன் வந்து தமிழ்ப்படங்களைப் பார்த்து ரசித்தனர்.
விழாவின் இறுதியில் நான்கு படங்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் மிஷ்கினின் நந்தலாலாவுக்கு மக்கள் தெரிவு விருது (People Choice Award) அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, விழாவில் பங்கேற்ற ஜனநாதனின் பேராண்மை, சசிகுமாரின் சுப்பிரமணியபுரம் மற்றும் சமுத்திரக் கனி இயக்கிய நாடோடிகள் ஆகிய பங்களுக்கும் வெவ்வேறு பிரிவுகளில் விருது கிடைத்துள்ளது.
இதற்கிடையே, திரைப்பட விழா முடிந்து இன்று நார்வேயிலிருந்து இன்று சென்னை திரும்புகிறார்கள் மிஷ்கின், சசிகுமார் உள்ளிட்ட இயக்குநர்கள்.