Don't Miss!
- News ஸ்மோக் பிஸ்கட் ரொம்ப ஆபத்து.. உணவில் திரவ நைட்ரஜன் கலந்து விற்றால் நடவடிக்கை! தமிழக அரசு வார்னிங்
- Sports பட்டிதரால் தப்பித்த ஆர்சிபி.. ட்விஸ்ட் கொடுத்த உனாத்கட்.. ஐதராபாத் அணிக்கு சவாலான இலக்கு!
- Lifestyle ஜப்பான் பெண்கள் நீண்ட காலம் இளமையாகவும், அழகாகவும் இருக்க இந்த 4 ரகசிய உணவுகள்தான் காரணமாம்...!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
நயன்தாராவுக்கு ஏசியாநெட் விருது... விஜய் வழங்கினார்!
மலையாளத்தில் வெளியான பாடிகார்ட் படத்தில் சிறப்பாக நடித்த நயன்தாராவுக்கு சிறந்த நடிகை விருது வழங்கியது ஏசியாநெட் நிறுவனம்.
மலையாளத்தில் பிரபல சேனலான ஏசியாநெட், ஆண்டுதோறும் திரைப்பட விருதுகளை வழங்கி வருகிறது.
இந்த ஆண்டு விருது வழங்கும் விழா கொச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. அமிதாப் பச்சன், நடிகர் விஜய் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
பாடிகார்ட் ( தமிழில் விஜய் நடித்துள்ள காவலன்) படத்தில் சிறப்பாக நடித்ததற்காக நயன்தாராவுக்கு சிறந்த நடிகை விருது வழங்கப்பட்டது. அவருக்கு இந்த விருதினை மேடையில் வழங்கியவர் விஜய்.
விழாவில் நயன்தாரா எதுவும் பேசவில்லை. பேசச் சொன்னபோது, நன்றி என்று மட்டும் கூறி இருக்கைக்குத் திரும்பினார்.
சிறந்த நடிகருக்கான 'பாபுலர் விருது' நடிகர் திலீபுக்கு வழங்கப்பட்டது. இவரும் பாடிகார்ட் படத்தில் நடித்ததற்காக இந்த விருதினைப் பெற்றார்.
இந்த விருது விழாவில் மலையாள முன்னணி நடிகர்கள் மோகன்லால், மம்முட்டி உள்பட பலரும் பங்கேற்றனர்.