Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
திரையுலக சாதனையாளர்களுக்கு எடிசன் விருதுகள்
சாந்தோம் மேல் நிலைப்பள்ளி அரங்கில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கே.எஸ்.ரவிக்குமாருக்கு சிறந்த இயக்குநருக்கான (தசாவதாரம்) விருது வழங்கப்பட்டது. வல்லமை தாராயோ படத்தை தயாரித்த திரிசக்தி சுந்தரராமன் இந்த விருதினை வழங்கினார்.
சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது மறைந்த ஜீவாவுக்கு வழங்கப்பட்டது. ஜீவாவின் மகள் இந்த விருதைப் பெற்றுக் கொண்டார்.
சுப்பிரமணியபுரம் படத்துக்கு இசையமைத்த ஜேம்ஸ் வசந்தனுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது வழங்கப்பட்டது.
சிறந்த பெண் இயக்குநராக வல்லமை தாராயோ மதுமிதா தேர்வு செய்யப்பட்டார்.
பாடகி சின்னப் பொண்ணு, ஒளிப்பதிவாளர் ஆர்டி ராஜசேகர் ஆகியோரும் விருது பெற்றனர்.
பிரகாஷ்ராஜ், கீர்த்தி சாவ்லா, இயக்குநர் பேரரசு உள்பட பலரும் இந்த விழாவில் பங்கேற்றனர். தமிழ்மூவீஸ் செல்வகுமார் விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.
முன்னதாக நடிகர் அலெக்ஸின் மேஜிக் நிகழ்ச்சி நடைபெற்றது.