Don't Miss!
- News "பாம் வச்சிருக்கோம்! சீக்கிரம் வெடிக்க போகுது!" சென்னை வி.ஆர்.மாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
- Lifestyle உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற அற்புதமான டிப்ஸ்..
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பத்மஸ்ரீ..விவேக்குக்கு உற்சாக வரவேற்பு!
பெரும் திரளான ரசிகர்கள் அவருக்கு ரோஜா மாலை அணிவித்து மேள தாளங்களுடன் வரவேற்று மகிழ்ந்தனர்.
சின்னக் கலைவாணர் எனப் புகழப்படும் நகைச்சுவை நடிகர் விவேக்குக்கு இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. டெல்லியில் நடந்த விழாவில் குடியரசுத் தலைவர் பிரதிபா பட்டீலிடம் இந்த விருதினைப் பெற்றார் விவேக்.
விருது பெற்ற கையோடு நேற்று சென்னை திரும்பிய அவர் தனது அலுவலகம் அமைந்துள்ள விருகம்பாக்கம் பகுதிக்கு வந்தார். ஏராளமான பொதுமக்களும், ரசிகர்களும் திரண்டு வந்து அவரை வரவேற்றனர். குறிப்பாக பெண்கள் ஏராளமாக வந்திருந்தனர். பட்டாசுகள் வெடித்து, பேண்டு வாத்தியங்கள் முழங்க அவரை வரவேற்றனர்.
தான் பெற்று வந்த பத்மஸ்ரீ விருதினை அவர்களிடம் காட்டிய விவேக், தன்னுடைய இந்த புகழுக்கும், கிடைத்த விருதுக்கும் மக்களின் ரசிப்புத் தன்மைதான் முக்கிய காரணம் என்றார். தனக்கு வாய்ப்பளித்த இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், உடன் நடித்த நடிகர் நடிகைகள் மற்றும் இதர தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் இந்த விருதில் பங்குள்ளது என்று கூறிய விவேக் அவர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
அவருக்கு ரசிகர் மன்றம் சார்பில் ஆளுயர மாலை, மலர்க்கிரீடம், செங்கோல் ஆகியவற்றை வழங்கினர் ரசிகர்கள்.