Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
இசைஞானி இளையராஜாவுக்கு அக்ஷய சம்மான் விருது!
இசைத் துறையில் இணையற்ற சாதனை படைத்ததற்காக, 2010-ம் ஆண்டுக்கான இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது. ஒரு லட்ச ரூபாய் ரொக்கத்துடன் கூடிய பாராட்டுப் பட்டயம் அவருக்கு வழங்கப்படுகிறது.
ஒரிசா மாநிலத்தில் உள்ள அக்ஷயா மொகந்தி அறக்கட்டளை சார்பில் இந்த விருது வழங்கப்படுகிறது.
கடந்த 2007-ம் ஆண்டு முதல் சாதனையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இந்த அக்ஷய சம்மான் விருதை, ஏற்கனவே மன்னா டே, குல்சார் மற்றும் பண்டிட் ஹரிபிரசாத் சௌராசியா என இசைமேதைகள் பெற்றுள்ளனர். அடுத்த மாதம் புவனேஸ்வர் நகரில் நடைபெறும் விழாவில் இளையராஜாவுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
உலக அளவில் பல்வேறு பெருமைக்குரிய விருதுகளை பெற்றுள்ள 67 வயதான 'இசைஞானி' இளையராஜா, சிம்பொனி மற்றும் ஆரட்டோரியோ போன்ற உயர்ந்த இசைக் கோர்வைகளை அமைத்த முதல் இந்திய இசையமைப்பாளராவார். சிறந்த திரைப்பட இசையமைப்பாளருக்கான மத்திய அரசின் விருதை 4 முறை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2010-ம் ஆண்டுக்கான சிறந்த பின்னணி இசைக்கான விருது இரு தினங்களுக்கு முன்புதான் அவருக்கு அறிவிக்கப்பட்டது.