Don't Miss!
- Sports Thank you ரஹானே! தயவு செய்து ஓய்வு பெற்றுவிடுங்க.. தொடர்ந்து சொதப்பும் வீரருக்கு வாய்ப்பு ஏன்?
- News படுக்கையறையில் ஷோபா.. அந்த கோலத்தை கண்டு கதறிய மகள்.. மீண்டும் மீண்டும் டார்ச்சர்.. கொடுமையை பாருங்க
- Automobiles குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- Technology Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
டாக்கா திரைப்பட விழாவில் விருது வென்ற வன்னி எலிகள்!
வங்கதேச தலைநகர் டாக்காவில் சௌகத் உஸ்மான் லைப்ரரி அரங்கில் 11வது சர்வதேச குறும்படம் மற்றும் சுதந்திர ஊடகத்துக்கான விழா நடந்தது. இதில் வன்னி எலிகள் என்ற ஈழக் குறும் படமும் பங்கேற்றது.
வன்னிக் காடுகளில் வசிக்கும் இணைபிரியாத இரண்டு எலிகள், மூன்று லட்சம் மக்களை அடைத்து வைத்திருக்கும் வவுனியா வதை முகாம்களுக்குள் யதேச்சையாக செல்கின்றன. முள்வேலிக்குப் பின்னால் அடைக்கப்பட்ட அந்த அப்பாவி தமிழர்கள் படும் சொல்லொனாத் துயரங்களுக்கு மவுன சாட்சியாக நிற்கின்றன அந்த எலிகள்.
வெளியில் சொல்ல முடியாத, யாரும் அத்தனை சுலபத்தில் அறிந்து கொள்ளவும் முடியாத அந்த துயரக் காட்சிகளை காணச் சகிக்காத அந்த எலிகள் அங்கிருந்து எப்படித் தப்பித்தன என்பது 'க்ளைமாக்ஸ்'.
தமிழியம் சுபாஷ் எனற 26 வயது ஈழத் தமிழரால் உருவாக்கப்பட்ட படம் இது. ஏற்கெனவே சென்னையில் நடந்த பெரியார் குறும்பட விழாவில் வன்னி எலிகளுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது.
கடந்த மாதம் நார்வே தலைநகர் ஓஸ்லோவில் நடந்த சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் குறும் படத்துக்கான சிறப்பு விருதினை இந்தப் படம் வென்றது.
சர்வதேச அளவில் குறும்படத்துக்காக விருது வென்ற முதல் ஈழக் கலைஞரின் படம் வன்னி எலிகள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இம்மாத இறுதியில் பாரிசில் நடக்கும் ஐரோப்பிய குறும்பட (டிராமா பிரிவு) விழாவில் பங்கேற்கவும் இந்தப் படம் தகுதி பெற்றுள்ளது.
வன்னி எலிகளுக்குப் பிறகு 'Can I have a Dream?' என்ற குறும் படத்தை இயக்கி வெளியிடுகிறார் சுபாஷ்.