Don't Miss!
- News நாளை தீர்ப்பு நாள்.. அரசியல் அதிகாரத்தால் எதையும் மாற்றலாம்.. ஒரு விரல் புரட்சிக்கு ரெடியா?
- Finance மாதம் ரூ. 8,150 முதலீட்டில் .. ரூ. 1,00,000 பென்ஷன் பெற முடியும்.. எப்படின்னு பாருங்க!
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Automobiles காரை விட அவங்கதான் அழகா இருக்காங்க! விலை உயர்ந்த எலெக்ட்ரிக் வண்டியை வாங்கனது அவங்களா! சொக்கி போன ரசிகர்கள்!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Sports ஒரு பந்துக்கு 12 ரன் அடிக்க பார்க்காதே.. எவ்வளவு முறை சொல்றது? இளம் வீரருக்கு சூர்யகுமார் அட்வைஸ்
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஜனாதிபதியிடம் விருது பெற்றார் பிரகாஷ் ராஜ்
காஞ்சிவரம் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.
55-வது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த செப்டம்பர் 7-ந் தேதி அறிவிக்கப்பட்டன. தேசிய அளவில் சிறந்த திரைப்படமாக 'காஞ்சிவரம்' தமிழ் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது. இந்தப் படத்தில் நடித்த பிரகாஷ்ராஜ், அகில இந்திய அளவில் சிறந்த நடிகராக அறிவிக்கப்பட்டார்.
இந்த விருதுகள் வழங்கும் விழா நேற்று டெல்லி விஞ்ஞான் பவன் கட்டிடத்தில் நடந்தது. குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீல் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.
தேசிய அளவில் சிறந்த திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 'காஞ்சிவரம்' படத்துக்கான விருதை அதன் தயாரிப்பாளர் சைலேந்திர சிங் மற்றும் இயக்குனர் பிரியதர்ஷன் ஆகியோர் பெற்றனர்.
அந்த படத்தில் நடித்த நடிகர் பிரகாஷ்ராஜ் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி பிரதீபா பட்டீலிடமிருந்து பலத்த கரவொலிக்கிடையே பெற்றார்.
தேசிய அளவிஸல் இரண்டாவது முறையாக விருது பெறுகிறார் பிரகாஷ் ராஜ். ஏற்கனவே, 'இருவர்' படத்துக்காக சிறந்த துணை நடிகர் விருதை அவர் பெற்றுள்ளார்.
உமாஸ்ரீ..
சிறந்த நடிகைக்கான தேசிய விருது, கன்னட நடிகை உமாஸ்ரீக்கு வழங்கப்பட்டது.
தேசிய அளவில் சிறந்த பொழுதுபோக்கு படமாக ஷாருக்கான் நடித்த 'சக் தே இந்தியா' இந்தி திரைப்படம் தேர்வு பெற்றிருந்தது. அந்த விருதை படத்தின் தயாரிப்பாளர் யாஷ் சோப்ரா மற்றும் இயக்குனர் சிமித் அமின் ஆகியோர் பெற்றனர்.
சிறந்த இயக்குனருக்கான விருதை பிரபல மலையாள இயக்குனர் அடூர் கோபால கிருஷ்ணனுக்கு வழங்கினார் பிரதிபா பட்டீல். தமிழில் சிறந்த படமான 'பெரியார்' படத்துக்கும் விருது வழங்கப்பட்டது.
மன்னா டே-க்கு தாதா சாகேப் பால்கே விருது...
பிரபல இந்துஸ்தானி மற்றும் இந்தி பாடகர் மன்னா டே, 'தாதா சாகிப் பால்கே' விருதைப் பெற்றார். அவருக்கு ரூ.10 லட்சம் ரொக்க பரிசு, தங்கத் தாமரை மற்றும் சால்வை வழங்கப்பட்டது.
அவருக்கு விருது வழங்கும்போது, 'மன்னா டே, ஒரு மிகச் சிறந்த பாடகர்' என்று பிரதீபா பட்டீல் பாராட்டினார்.
சிறந்த பின்னணி பாடகருக்கான விருதை சங்கர் மகாதேவனும், பாடகிக்கான விருதை ஸ்ரேயா கோஷலும் பெற்றனர்.
நேற்றைய விழாவில் மொத்தம் 53 விருதுகள் வழங்கப்பட்டன.
-
மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!
-
சூரியன் படத்துல சரத்குமாருக்கு பதில் இவரா?.. கவுண்டமணி சரியான நக்கல் புடிச்ச ஆளு.. பவித்ரன் பேட்டி!