Don't Miss!
- News பா ரஞ்சித்துடன் இணைந்த கனிமொழி.. நீலம் பண்பாட்டு மைய விழாவில் வெறுப்புவாத அரசியலுக்கு எதிராக பேச்சு
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அங்காடித் தெருவுக்கு மேலும் ஒரு விருது!
வசந்த பாலன் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற அங்காடித் தெரு படத்துக்கு சென்னை திரைப்பட விழாவில் சிறந்த படத்துக்கான விருது வழங்கப்பட்டது.
அய்ங்கரன் தயாரிப்பாக வந்து, சர்வதேச அளவில் பல விருதுகளையும் பாராட்டுக்களையும் குவித்துள்ள படம் அங்காடித் தெரு. பெரும் வர்த்தக நிறுவனங்களின் இன்னொரு இருட்டுப் பக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிய படம்.
வணிக ரீதியிலும் பெரும் வெற்றி பெற்றது. சமீபத்தில் கோவா திரைப்பட விழாவில் இந்தப் படம் திரையிடப்பட்டு பெரும் வரவேற்பையும் பாராட்டுக்களையும் பெற்றது.
இப்போது, சென்னை சர்வதேச திரைப்பட விழாவிலும் அங்காடித் தெரு திரையிடப்பட்டது. திரைப்பட விழாவின் இறுதி நாளான நேற்று, அதில் பங்கேற்ற படங்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன.
தமிழில் சிறந்த படமாக அங்காடித் தெரு அறிவிக்கப்பட்டது. படத்தின் இயக்குநர் வசந்த பாலன், தயாரிப்பாளர்கள் அருண்பாண்டியன் மற்றும் விஜயகுமாரிடம் அதற்கான விருதினை வழங்கிப் பாராட்டினார்கள் இயக்குநர்கள் பாலுமகேந்திரா மற்றும் கே பாக்யராஜ்.
சற்குணம் இயக்கிய களவாணி படத்துக்கு இரண்டாவது சிறந்த படத்துக்கான விருதினை வழங்கப்பட்டது.
ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்ததற்காக பார்த்திபனுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது.
மைனா படத்துக்காக பிரபு சாலமனுக்கு சிறந்த இயக்குநர் விருது வழங்கப்பட்டது.