Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கந்தசாமி 100... கலைஞர்களுக்கு கேடயம் கொடுத்த கிராம மக்கள்!
கலைப்புலி தாணு தயாரிப்பில், விக்ரம்-ஸ்ரேயா நடித்து, சுசி கணேசன் இயக்கிய படம் கந்தசாமி. பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்த இந்தப் படம் 'ஒருவழியாக' 100 நாள் என்ற கோலிவுட்டின் வெற்றி இலக்கைத் தொட்டது.
கந்தசாமி 100-வது நாள் விழா தி நகரில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நேற்று இரவு நடந்தது.
விழாவில் கந்தசாமி படக்குழுவினர் தத்தெடுத்திருந்த தேனி அருகில் உள்ள வன்னிவேலம்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்த மக்கள் திரளாகக் கலந்து கொண்டார்கள்.
படத்தில் நடித்த நடிகர்கள் விக்ரம், நடிகை ஸ்ரேயா, இயக்குநர் சுசிகணேசன், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம், மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு மற்றும் படத்தில் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்களுக்கு வன்னிவேலம்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கேடயங்களை வழங்கினார்கள்.
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் வி.சி.குகநாதன், இயக்குநர் பாக்யராஜ், நடிகர் விக்ரம் தந்தை வினோத்ராஜ் ஆகியோர் பேசினர்.