Don't Miss!
- News நாளை தீர்ப்பு நாள்.. அரசியல் அதிகாரத்தால் எதையும் மாற்றலாம்.. ஒரு விரல் புரட்சிக்கு ரெடியா?
- Finance மாதம் ரூ. 8,150 முதலீட்டில் .. ரூ. 1,00,000 பென்ஷன் பெற முடியும்.. எப்படின்னு பாருங்க!
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Automobiles காரை விட அவங்கதான் அழகா இருக்காங்க! விலை உயர்ந்த எலெக்ட்ரிக் வண்டியை வாங்கனது அவங்களா! சொக்கி போன ரசிகர்கள்!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Sports ஒரு பந்துக்கு 12 ரன் அடிக்க பார்க்காதே.. எவ்வளவு முறை சொல்றது? இளம் வீரருக்கு சூர்யகுமார் அட்வைஸ்
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கந்தசாமி 100... கலைஞர்களுக்கு கேடயம் கொடுத்த கிராம மக்கள்!
கலைப்புலி தாணு தயாரிப்பில், விக்ரம்-ஸ்ரேயா நடித்து, சுசி கணேசன் இயக்கிய படம் கந்தசாமி. பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்த இந்தப் படம் 'ஒருவழியாக' 100 நாள் என்ற கோலிவுட்டின் வெற்றி இலக்கைத் தொட்டது.
கந்தசாமி 100-வது நாள் விழா தி நகரில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நேற்று இரவு நடந்தது.
விழாவில் கந்தசாமி படக்குழுவினர் தத்தெடுத்திருந்த தேனி அருகில் உள்ள வன்னிவேலம்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்த மக்கள் திரளாகக் கலந்து கொண்டார்கள்.
படத்தில் நடித்த நடிகர்கள் விக்ரம், நடிகை ஸ்ரேயா, இயக்குநர் சுசிகணேசன், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம், மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு மற்றும் படத்தில் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்களுக்கு வன்னிவேலம்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கேடயங்களை வழங்கினார்கள்.
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் வி.சி.குகநாதன், இயக்குநர் பாக்யராஜ், நடிகர் விக்ரம் தந்தை வினோத்ராஜ் ஆகியோர் பேசினர்.