Don't Miss!
- News நாளை மாலை 6 மணி வரை வரிசையில் நிற்கும் அனைவரும் வாக்களிக்கலாம்! சத்யபிரத சாகு தகவல்
- Finance மிரட்டும் குஜராத், அசராத வளர்ச்சியில் தமிழ்நாடு..!
- Lifestyle பளபளப்பான முகத்திற்கு தயிர்-எலுமிச்சை ஃபேஸ் பேக்கை ட்ரை பண்ணுங்க..!
- Technology சாதா ஹெல்மெட் தூக்கி போடுவாங்க.. வந்தாச்சு ஏசி ஹெல்மெட்.. சில்லுனு காத்து.. இனி வெயிலை சமாளிக்க முடியும்..
- Sports தோனியை சமாதானப்படுத்த முடியாது.. அந்த விஷயத்திற்கு ரிஷப் பண்ட் தான் சரி.. ரோகித் சர்மா கலகல!
- Automobiles ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
குடியரசுத் தலைவரிடம் 'பத்ம' விருது பெற்ற எஸ்.பி.பி, ஜெயராம், தபு!
டெல்லி: பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணுக்கு பத்மபூஷன் விருதையும், நடிகர் ஜெயராம், நடிகை தபு, கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ்.லட்சுமணன் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதையும் வழங்கினார் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் அசோகா மண்டபத்தில், பத்ம விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீல் இந்த விருதுகளை வழங்கினார்.
துணை குடியரசுத் தலைவர் அமீது அன்சாரி, பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருதை, முன்னாள் கவர்னர் ஏ.ஆ.கித்வாய், இலக்கியவாதி ஓ.என்.வி.குருப், வாஜ்பாய் அரசில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த பிரஜேஷ் மிஸ்ரா, மூத்த அறிஞர் கபிலா வாத்சயன் ஆகியோருக்கு குடியரசுத் தலைவர் வழங்கினார்.
எஸ்.பி.பி.க்கு விருது
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், இந்தி நடிகை வஹீதா ரகுமான், மூத்த விஞ்ஞானி எஸ்.ராமச்சந்திரன், இசையமைப்பாளர் கய்யாம் உள்ளிட்டோர் பத்ம பூஷண் விருது பெற்றனர்.
பத்மஸ்ரீ
நடிகர் ஜெயராம், நடிகை தபு, கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ்.லட்சுமண், விண்வெளி விஞ்ஞானி எம்.அண்ணாமலை, பளுதூக்கும் வீராங்கனை குஞ்சாராணி தேவி, பரத நாட்டிய குரு எம்.கே.சரோஜா, இந்தியாவில் சோதனைக்குழாய் குழந்தை உருவாக்கத்தில் முன்னோடியான மகப்பேறு நிபுணர் இந்திரா ஹிந்துஜா உள்ளிட்டோர் பத்மஸ்ரீ விருது பெற்றனர்.