Don't Miss!
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Finance களையெடுக்க வரும் மத்திய அரசு.. ஜியோ, ஏர்டெல் உடன் கூட்டணி.. OTP மோசடி-க்கு முடிவு..!!
- News குரு வந்தால் கோடியில் கொடுப்பார்.. ஆனால் ஒரு சிக்கல்! ரிஷப ராசிக்கு குரு பெயர்ச்சி எப்படி இருக்கும்?
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Automobiles ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
குடியரசுத் தலைவரிடம் 'பத்ம' விருது பெற்ற எஸ்.பி.பி, ஜெயராம், தபு!
டெல்லி: பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணுக்கு பத்மபூஷன் விருதையும், நடிகர் ஜெயராம், நடிகை தபு, கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ்.லட்சுமணன் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதையும் வழங்கினார் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் அசோகா மண்டபத்தில், பத்ம விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீல் இந்த விருதுகளை வழங்கினார்.
துணை குடியரசுத் தலைவர் அமீது அன்சாரி, பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருதை, முன்னாள் கவர்னர் ஏ.ஆ.கித்வாய், இலக்கியவாதி ஓ.என்.வி.குருப், வாஜ்பாய் அரசில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த பிரஜேஷ் மிஸ்ரா, மூத்த அறிஞர் கபிலா வாத்சயன் ஆகியோருக்கு குடியரசுத் தலைவர் வழங்கினார்.
எஸ்.பி.பி.க்கு விருது
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், இந்தி நடிகை வஹீதா ரகுமான், மூத்த விஞ்ஞானி எஸ்.ராமச்சந்திரன், இசையமைப்பாளர் கய்யாம் உள்ளிட்டோர் பத்ம பூஷண் விருது பெற்றனர்.
பத்மஸ்ரீ
நடிகர் ஜெயராம், நடிகை தபு, கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ்.லட்சுமண், விண்வெளி விஞ்ஞானி எம்.அண்ணாமலை, பளுதூக்கும் வீராங்கனை குஞ்சாராணி தேவி, பரத நாட்டிய குரு எம்.கே.சரோஜா, இந்தியாவில் சோதனைக்குழாய் குழந்தை உருவாக்கத்தில் முன்னோடியான மகப்பேறு நிபுணர் இந்திரா ஹிந்துஜா உள்ளிட்டோர் பத்மஸ்ரீ விருது பெற்றனர்.