Don't Miss!
- Finance பெங்களூர் தண்ணீர் பஞ்சத்தில் இப்படியொரு பிரச்சனையா..? அதிர்ச்சியான விஷயம் தான்..!
- News எதுக்கும் ரெஸ்பான்ஸ் இல்லை.. சென்னை ஏர்போட்டில் கொந்தளித்த பயணிகள்.. எமிரேட்ஸ் அலுவலகம் முற்றுகை
- Automobiles ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
- Sports மும்பை இந்தியன்சின் ஏமாற்று வேலைக்கு இனி ஆப்பு.. புதிய நடைமுறையை கொண்டு வந்த ஐபிஎல் நிர்வாகம்
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பீப்ளியால் ஆஸ்கர் வாய்ப்பிழந்த அங்காடித் தெரு!
அமீர்கான் தயாரிப்பில் உருவான பீப்ளி லைவ் படத்தால் ஆஸ்கருக்குச் செல்லும் வாய்ப்பை இழந்தது வசந்தபாலனின் அங்காடித் தெரு.
தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படம் என்று விமர்சகர்களால் பாராட்டப்பட்ட திரைப்படம் அங்காடித் தெரு. வசூல் ரீதியாகவும் ஐங்கரன் நிறுவனத்துக்கு பெரிதும் கைகொடுத்தது இந்தப் படம்.
சென்னையின் மாபெரும் அடுக்குமாடி ஜவுளிக் கடைகள், சூப்பர் ஷாப்பிங் மால்களில் வேலைக்கு சேர்ந்து, கொத்தடிமைகளாய் அவதிப்படும் பதின்ம வயது இளைஞர்களின் வாழ்க்கையை தத்ரூபமாய் கண்முன் நிறுத்தி கலங்க வைத்த படம் இது.
வசந்த பாலன் இயக்கியிருந்தார்.
இந்தியாவின் சார்பில் ஆஸ்கர் விருதுக்குச் செல்லும் படங்களில் ஒன்றாக அங்காடித் தெருவை தேர்வு செய்திருந்தனர்.
அமீர்கானின் பீப்ளி லைவ் படத்துக்கும் அங்காடித் தெருவுக்கும்தான் கடும் போட்டி நிலவியது. இறுதியில், வறுமையில் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் அவலத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிய பீப்ளி லைவ் படத்துக்கு ஆஸ்கர் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.
ஒரு தேசத்தின் வாழ்வாதார பிரச்சினை, அதற்கான நிஜ காரணம் போன்றவற்றை பீப்ளி லைவ் விளக்கியிருந்தது. அதுவே அந்தப் படத்தை ஆஸ்கர் வரை கொண்டு சென்றது என்றார் தேர்வுக் குழுவிலிருந்த இயக்குநர் சேது மாதவன்.