Don't Miss!
- Automobiles சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
தசாவதாரத்திற்கு முதல் விருது!
சிறந்த திரைப்படங்கள், கலைஞர்களுக்கான சாந்தாராம் விருது வழங்கும் விழா மும்பையில் நடந்தது.
இதில், தசாவதாரம் படத்தின் ஒலிப்பதிவாளர் எச்.ஸ்ரீதருக்கு சிறந்த ஒலிப்பதிவாளருக்கான விருது கிடைத்தது.
ஆமிர்கான் முதன் முதலில் இயக்கி நடித்த தாரே ஜமீன் பர் படமும், ஏ வெட்னஸ்டே படமும் பல விருதுகளை தட்டிச் சென்றன.
தாரே ஜமீன் பர் படத்திற்கு, சிறந்த படத்துக்கான சாந்தாராம் கோல்ட் விருதும், ஏ வெட்னஸ்டே மற்றும் மராத்தி படமான திங்கியா ஆகியவற்றுக்கு வெள்ளி மற்றும் வெண்கல விருதும் கிடைத்தன.
நீரஜ் பாண்டேவுக்கு சிறந்த இயக்குநருக்கான கோல்ட் விருதும், சிறந்த புதுமுக இயக்குநருக்கான விருதும் கிடைத்தது.
வெள்ளி விருது தாரே ஜமீன் பர் படத்தை இயக்கிய ஆமிர்கானுக்கும், ஜோதா அக்பர் படத்தை இயக்கி அசுதோஷ் கோவரிகருக்கு வெண்கல விருதும் கிடைத்தது.
தாரே ஜமீன் பர் படத்தில் நடிப்பில் கலக்கிய குட்டிப் பையன் தர்ஷீல் ஜப்ரிக்கு சிறந்த நடிகர் விருதும், ஐஸ்வர்யா ராய் பச்சனுக்கு (ஜோதா அக்பர்) சிறந்த நடிகைக்கான விருதும் கிடைத்தது.
ஜோதா அக்பர் படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது கிடைத்தது.