ஊத்தங்கரை முரளிக்கு குறும்பட ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது !

கடந்த வருடத்திற்கான திரைப்பட, குறும்பட விருதுகள் கடந்த வியாழனன்று (மே 19) அறிவிக்கப்பட்டது. இதில் அருனிமா ஷர்மா இயக்கிய ஷயம் ராத் ஷெகர் என்ற குறும்படத்திற்குச் சிறந்த இயக்கம் மற்றும் ஒளிப்பதிவுக்கான விருதுகள் கிடைத்துள்ளன.
புனே திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் இக் குறும் படத்தை உருவாக்கியுள்ளனர்.
இப் படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளர் விருது பெற்றுள்ள ஜி. முரளி கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்தவர் ஆவார். இவரது பெற்றோர்கள் கே.சி. கோவிந்தராஜூம், சரோஜாவும் அரசுப் பள்ளி ஆசிரியர்களாக உள்ளனர்.
சிறந்த குறும்பட ஒளிப் பதிவாளருக்கான வெள்ளித்தாமரை விருதுடன் ரூ 50 ஆயிரம் பரிசுத் தொகை குடியரசுத் தலைவரால் முரளிக்கு வழங்கப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications











