Don't Miss!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Lifestyle April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- News கடனுக்காக இரவில் அசிங்கமாக பேசிய நிதி நிறுவன ஊழியர்கள்? தேனியில் குடும்பமே தற்கொலை
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
எஸ்பிபிக்கு பி.சுசீலா அறக்கட்டளை விருது
திரையுலகில் சாதனை படைத்த இசை கலைஞர்களுக்கு விருதுகள் வழங்க பாடகி பி சுசீலா தனது பெயரில் அறக்கட்டளை ஒன்றை சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கினார்.
ஆண்டுதோறும் இந்த 'சுசீலா விருது' வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு எஸ்.ஜானகிக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இந்த ஆண்டு எஸ்.பி.பாலசுப்ரமணியம் பெறுகிறார். ரூ. 1 லட்சம் பரிசும் வழங்கப்படுகிறது. நவம்பர் 14ம் தேதி ராயப்பேட்டை வெஸ்லி மைதானத்தில் விழா நடக்கிறது.
இந்த விழாவில் இசையமைப்பாளர்கள் பாலமுரளிகிருஷ்ணா, எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, டிஎம் சவுந்திரராஜன், எஸ்.ஜானகி, பி.பி.சீனிவாஸ் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.
யூ.கே.முரளி இசையில் இந்த மேதைகள் பாட ஒப்புக் கொண்டுள்ளதாக சுசீலா தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் திரளும் நிதியில் பாதி, ஆந்திர வெள்ள நிவாரணத்துக்கு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
விழாவுக்கு கமல்ஹாஸன் தலைமை தாங்குகிறார்.