Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
எஸ்பிபிக்கு பி.சுசீலா அறக்கட்டளை விருது
திரையுலகில் சாதனை படைத்த இசை கலைஞர்களுக்கு விருதுகள் வழங்க பாடகி பி சுசீலா தனது பெயரில் அறக்கட்டளை ஒன்றை சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கினார்.
ஆண்டுதோறும் இந்த 'சுசீலா விருது' வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு எஸ்.ஜானகிக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இந்த ஆண்டு எஸ்.பி.பாலசுப்ரமணியம் பெறுகிறார். ரூ. 1 லட்சம் பரிசும் வழங்கப்படுகிறது. நவம்பர் 14ம் தேதி ராயப்பேட்டை வெஸ்லி மைதானத்தில் விழா நடக்கிறது.
இந்த விழாவில் இசையமைப்பாளர்கள் பாலமுரளிகிருஷ்ணா, எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, டிஎம் சவுந்திரராஜன், எஸ்.ஜானகி, பி.பி.சீனிவாஸ் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.
யூ.கே.முரளி இசையில் இந்த மேதைகள் பாட ஒப்புக் கொண்டுள்ளதாக சுசீலா தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் திரளும் நிதியில் பாதி, ஆந்திர வெள்ள நிவாரணத்துக்கு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
விழாவுக்கு கமல்ஹாஸன் தலைமை தாங்குகிறார்.