twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    62 வது தென்னிந்திய பிலிம்பேர் – தெலுங்கில் விருதுகளை வாரிக் குவித்த மனம்

    By Manjula
    |

    ஹைதராபாத்: 62 வது தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா நேற்று சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளிலும் சிறந்த படங்களைத் தேர்வு செய்து அதற்கான விருதுகள் வழங்கப்பட்டன.

    தெலுங்கு சினிமாவில் அதிகபட்சமான விருதுகளை மனம் திரைப்படம் அள்ளிச் சென்றது, நாகேஸ்வர ராவ், நாகர்ஜுன், நாக சைதன்யா என தெலுங்கு சினிமாவின் மூன்று தலைமுறை நடிகர்களும் இந்தப் படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

    62nd Filmfare Awards South 2015 - Manam Telugu Movie Won 5 Awards

    சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த பாடகர், சிறந்த துணை நடிகர் மற்றும் நடிகை, சிறந்த இசையமைப்பாளர், சிறந்த பாடலாசிரியர், சிறந்தபின்னணிப் பாடகர், சிறந்த பின்னணிப்பாடகி போன்ற 10 பிரிவுகளில் சிறந்த பின்னணிப்பாடகர் தவிர்த்து மொத்தம் 9 பிரிவுகளில் போட்டியிட்டது மனம் திரைப்படம்.

    போட்டியிட்ட 9 பிரிவுகளில் 4 விருதுகளை சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர் , சிறந்த இசையமைப்பாளர் மற்றும் சிறந்த பாடலாசிரியர் என மொத்தம் 4 விருதுகளை அள்ளிச் சென்றது மனம் திரைப்படம்.

    மனம் திரைப்படத்திற்கு அடுத்த இடத்தை( 3 விருதுகள்) அல்லு அர்ஜுனின் ரேஸ் குர்ரம் தட்டிச் சென்றது. சிறந்த நடிகருக்கான விருது அல்லு அர்ஜுனுக்கும் , சிறந்த நடிகைக்கான விருது சுருதிஹாசனுக்கும் வழங்கப்பட்டது. மேலும் சிறந்த பின்னணிப்பாடகர் விருது ரேஸ் குர்ரம் படத்தில் சினிமா சூபிஸ்டா பாடலைப் பாடியதற்காக பின்னணிப்பாடகர் சிம்ஹா விற்கு வழங்கப்பட்டது.

    English summary
    Telugu Blockbuster movie "Manam" has topped the Telugu winners list of the 62nd Filmfare Awards South.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X