Don't Miss!
- Sports ராஜஸ்தானும் 2 போட்டியில் வெற்றி.. சிஎஸ்கேவின் முதல் இடம் என்ன ஆச்சு.. ஐபிஎல் புள்ளி பட்டியல் இதோ
- Technology அடிச்சான் பாரு காப்பி.. அச்சு அசலா Samsung போனை வெளியிட்ட சீன கம்பெனி.. என்ன மாடல்? எப்போது அறிமுகம்?
- Finance ஐஐஎம் பெங்களூரு: 516 பேருக்கு வேலை, சாராசரி சம்பளமே ரூ.32.5 லட்சமாம்..!
- Automobiles இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- News சீமானின் மைக் சின்னத்தை முன்வைத்து பாஜக நடிகர் எஸ்.வி.சேகர் ஆடும் 'மங்காத்தா' நாடகம்!
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பாகிஸ்தானின் 'கவுரவக் கொலைகளை' ஒரு குறும்படத்தால் மாற்றியமைக்க முடியுமா?
லாஸ் ஏஞ்செல்ஸ்: நடந்து முடிந்த ஆஸ்கர் விருதுகள் விழாவில் ஷர்மீன் ஒபிட்- சினாய்(37) என்ற பாகிஸ்தானிய- கனடப் பெண் இயக்கிய 'எ கேர்ள் இன் தி ரிவர்' சிறந்த குறும்படம் - டாக்குமென்டரி பிரிவில் விருதை வென்றுள்ளது.
கவுரவக் கொலைகள் என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் 1௦௦௦ க்கும் மேற்பட்ட பெண்கள் பாகிஸ்தான் நாட்டில், தங்கள் பெற்றோரால் படுகொலை செய்யப்படுகிறார்கள்.
இந்நிலையில் இந்த உண்மை சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்ட 'எ கேர்ள் இன் தி ரிவர்' ஆவணப்படம் தற்போது ஆஸ்கர் விருதை வென்றிருக்கிறது.
எ கேர்ள் இன் தி ரிவர்
பாகிஸ்தானின் கவுரவக் கொலைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஆவணப்படம் தான் எ கேர்ள் இன் தி ரிவர். சுமார் 40 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தப் படத்தை பாகிஸ்தான்- கனடப் பெண் இயக்குநர் ஷர்மீன் ஒபிட்- சினாய்(37) இயக்கியுள்ளார்.
கவுரவக் கொலைகள்
கவுரவக் கொலைகள் என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1௦௦௦ க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் பெற்றோரால் பாகிஸ்தான் நாட்டில் படுகொலை செய்யப்படுகிறார்கள். இதனை கருவாகக் கொண்டு உருவான படமே 'எ கேர்ள் இன் தி ரிவர்'. தனது தந்தை மற்றும் மாமாவின் கவுரவக் கொலை முயற்சியில் இருந்து தப்பிக்கும் 18 வயதுப் பெண்ணைப் பற்றிய கதையே இப்படத்தின் கரு. கொலைகார்களை மன்னிப்பதன் மூலம் அவர்கள் தண்டனைகளிலிருந்து தப்பித்து விடுகின்றனர் என்பதை இப்படம் எடுத்துக் கூறுகிறது.
சட்டத் திட்டங்களை
சமீபத்தில் இப்படத்தைப் பார்த்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப், பாகிஸ்தானின் சட்டங்களை மாற்றி அமைக்க வேண்டும் என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார். மேலும் பாகிஸ்தானின் மூத்த மந்திரிகளும், ராஜதந்திரிகளும் இந்தப் படம் பார்க்கும் நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.
பாகிஸ்தானின் முதல்
பாகிஸ்தானில் இருந்து முதன்முதலாக 2 ஆஸ்கர் விருதுகளை வென்றவர் என்ற பெருமை தற்போது ஷர்மீனுக்குக் கிடைத்துள்ளது. முன்னதாக சேவிங் பேஸ்(2012) ஆவணப் படத்திற்காக ஆஸ்கர் விருதை ஷர்மீன் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
ஷர்மீன் ஒபிட்- சினாய்
இந்தப் படத்தை இயக்கிய ஷர்மீன் ஒபிட்- சினாய் பாகிஸ்தான், கனடா என்று 2 நாடுகளில் குடியுரிமை பெற்றிருக்கிறார்.கடந்த 2004 ம் ஆண்டிலிருந்து
கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் கனடா நாட்டின் டொராண்டோ நகரில் வசித்து வருகிறார். இயக்குநர் மற்றும் பத்திரிகையாளர் என்ற இரட்டைக் குதிரையில் சவாரி செய்துவரும் ஷர்மீன் எம்மி உட்பட பல்வேறு விருதுகளை தனது படங்களுக்காக வாங்கிக் குவித்திருக்கிறார்.
இனியாவது பாகிஸ்தானின் கவுரவக் கொலைகள் குறையுமா?