Don't Miss!
- Finance இன்போசிஸ் எடுத்த முக்கிய முடிவு… கல்லூரி மாணவர்கள் ஷாக்.
- News அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சி.. நள்ளிரவில் கேட்ட பயங்கர சத்தம்.. அலறிய கடலூர்!
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Lifestyle சாணக்கிய நீதி படி திருமணமான ஆண்கள் இந்த தவறுகளை ஒருபோதும் பண்ணக்கூடாதாம்... இல்லனா அவங்க வாழ்க்கை அவ்வளவுதான்!
- Sports சுற்றி சிஎஸ்கே ரசிகர்கள்.. நடுவில் ஒற்றை ஆளாய் போட்ட ஆட்டம்.. சேப்பாக்கத்தில் லக்னோ ரசிகர் சம்பவம்!
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அன்றும்... இன்றும்... என்றும்... இளையராஜா
இளையராஜாவுக்கு பத்மவிபூஷண் கிடைத்தது தொடர்பான பாராட்டுக் கவிதை
Recommended Video
கலா ரசிகனான உனக்கு
சிம்பொனியும் ஒன்றே
திருவாசகமும் ஒன்றே
சிம்பொனியை செதுக்கி கொடுத்தாய்
திருவாசகத்தை உருக்கிக் கொடுத்தாய்
40 ஆண்டு கால சாதனையை
முழுமையாய்
பதிவு செய்துவிட்டாய்
அன்னக்கிளியில் விதையான நீ
இன்று மகாவிருட்சமாய்
படர்ந்து விட்டாய்...
காய்ந்து சருகான
இதயங்களுக்கு
நீரோடையானது - உன் இசை
தேய்ந்து பலமிழந்த
மனங்களுக்கு
மருந்தானது-உன் ராகம்
தாய்ப்பாலைவிட
கலப்படமில்லாத
உன் இசை..
ரசவாத - அமுத சுரபி
எக்காலத்திலும், எல்லாவற்றையும்
சொல்ல உன் சாதனை
ஒன்றே போதும்
நாதத்தின் மூலம்
ஜீவனை தட்டியெழுப்பி
ஆன்மாக்களை ஒன்றோடொன்று
சிலாகிக்க வைத்தாய்
கலாரூபமெடுத்து
கிராமிய மணத்தை
கமழ கொடுத்தாய்
உன் கீதங்கள் எல்லாமே
நல்முத்து சரங்கள் - எந்த முத்து
நல்ல முத்தென்று எடுத்து சொல்ல?
இசைக்கீற்றாய் வலம் வந்து...
ஞான ஊற்றாய் உருமாறி... இன்று
காலத்தின் பொற்கனியாய் இனிக்கிறாய்
ஏழு ஸ்வரங்களும்
அண்ணாந்து பார்க்கின்றன
உன் அசுரத் திறமையை
மூங்கிலின் நாதத்தையும்
குயிலின் சுருதியையும்
ஆர்மோனிய பெட்டிக்குள்
திணித்து உலவ விட்டாய்
வாடாத பாடல்களை
கோர்த்து கொடுத்து
இசை சக்கரவர்த்தியானாய்
மேல்நாட்டு இசைகளை மெருகேற்றி
மேஸ்ட்ரோவானாய்
ஏழு ஸ்வரங்களின் ராகங்களின்
ரகசியங்களை புரிய வைத்து
ராகதேவனானாய்
ஞாலத்தை உணர்ந்த
ஞானிகளுக்கு
ஓர் இசைஞானியானாய்
வாழ்த்தொலிகளும் கரவொலிகளும்,
விண்ணை அதிர பிளக்கின்றன
உன் பத்மவிபூஷன் விருதினால்....
இசையமைக்கப்படாத ராகங்களும்...
மெட்டுப்போடாத பாடல்களும்கூட
பெருமைப்படுகின்றன -உன்னால்
நெகிழ்ச்சிகளின் தொகுப்பாய்...
உருக்கத்தின் மொத்த உருவமாய்...
பிரமிப்பூட்டும் உன் சாதனை
உன் வளர்ச்சி..
அண்ட பெருவெளியிலிருந்து
அதள பாதாளம்வரை
பிரம்மாண்டமாய் நீள்கிறது...
ரசிகர்கள் உறைகின்றனர்
உன் சுருதி லயத்தால்..
தேன் கின்னத்தில் சுவைத்து... திளைத்து
மயங்கி... கிறங்கிய... எறும்பு போல
சக இசையமைப்பாளர்கள் மத்தாய்ப்பாய்
தோன்றிய மறைய-
நீ மட்டும் அகல்விளக்கானாய...
என்றும் நிலைத்து... நிறைந்திருக்க...
நீ அன்று போட்ட
இசைப்பாதையில் - இன்று
புதிய காலடி தடங்கள்
உன் புகழ் எஞ்சியிருக்கிறது
சொல்லப்படாத வார்த்தைகளால்...
எழுதப்படாத எழுத்துக்களால்...
இதற்கு மேல் என்ன இருக்கிறது?
மொத்தத்தில் சரித்திரத்தில்
நீ ஒரு பக்கம் ஆகிவிட்டாய்
-
முடிச்சிடலாமா.. கூலி டைட்டில் டீசரில் ரஜினியின் டயலாக்.. முந்தைய படங்களை போலவே மாஸ் காட்டும் லோகேஷ்!
-
என்னது விக்ரம் நடித்த மெகா ஹிட் படத்தில் நடிக்க வேண்டியது அந்த நடிகரா?.. செமயா இருந்திருக்குமே
-
என்னை அரசியலுக்கு வரவிடாதீங்க.. நீங்க நல்லது செய்யுங்க.. நான் நடிச்சுட்டு போய்டுவேன்.. விஷால் பேட்டி!