Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
குழப்பமோ குழப்பம்: பாகுபலி 2 படத்தில் பணியாற்றாதவருக்கு தேசிய விருது அறிவிப்பு
Recommended Video
டெல்லி: பாகுபலி 2 படத்திற்கு வழங்கப்பட்டுள்ள தேசிய விருதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
65வது தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இன்னும் திரைக்கு வராத டூலெட் படத்திற்கு சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது கிடைத்துள்ளது.
ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகைக்கான விருதும், மறைந்த நடிகர் வினோத் கன்னாவுக்கு தாதா சாகேப் பால்கே விருதும் கிடைத்துள்ளது. பாகுபலி 2 படத்திற்கு சிறந்த ஆக்ஷன் டைரக்ஷன் உள்பட 3 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பாகுபலி 2 படத்தில் ஆக்ஷன் காட்சிகளை சிறப்பாக வடிவமைத்ததற்காக அப்பாஸ் அலி மொகுலுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது.
ஆனால் அப்பாஸ் பாகுபலி 1 மற்றும் 2 ஆகிய படங்களில் வேலை செய்யவில்லை என்று தயாரிப்பாளர் ஷோபு ட்விட்டரில் தெரிவித்துள்ளார். பாகுபலி 1 மற்றும் 2 படங்களில் பீட்டர் ஹெய்ன் தான் ஸ்டண்ட் மாஸ்டராக இருந்துள்ளார்.
Abbas Ali Moghul ?? He didn't work for @BaahubaliMovie 1 or 2.. https://t.co/liDtDp2P1T
— Shobu Yarlagadda (@Shobu_) April 13, 2018
இதனால் தேசிய விருது அறிவிப்பில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.