Don't Miss!
- News எதிர் எதிர் துருவம்.. சர்ப்ரைஸ் மீட்டிங்.. நேருக்கு நேர் சந்தித்து அளவளாவிய தமிழிசை - பிரேமலதா!
- Sports தோனிக்கு இது தான் கடைசி சீசனா? ரெய்னா சொன்னதை கேளுங்க!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்ப தலைவரிடம் இந்த 6 குணங்கள் இருக்கணுமாம்...அப்பதான் குடும்பம் நல்லா இருக்கும்
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
குழப்பமோ குழப்பம்: பாகுபலி 2 படத்தில் பணியாற்றாதவருக்கு தேசிய விருது அறிவிப்பு
Recommended Video
டெல்லி: பாகுபலி 2 படத்திற்கு வழங்கப்பட்டுள்ள தேசிய விருதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
65வது தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இன்னும் திரைக்கு வராத டூலெட் படத்திற்கு சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது கிடைத்துள்ளது.
ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகைக்கான விருதும், மறைந்த நடிகர் வினோத் கன்னாவுக்கு தாதா சாகேப் பால்கே விருதும் கிடைத்துள்ளது. பாகுபலி 2 படத்திற்கு சிறந்த ஆக்ஷன் டைரக்ஷன் உள்பட 3 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பாகுபலி 2 படத்தில் ஆக்ஷன் காட்சிகளை சிறப்பாக வடிவமைத்ததற்காக அப்பாஸ் அலி மொகுலுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது.
ஆனால் அப்பாஸ் பாகுபலி 1 மற்றும் 2 ஆகிய படங்களில் வேலை செய்யவில்லை என்று தயாரிப்பாளர் ஷோபு ட்விட்டரில் தெரிவித்துள்ளார். பாகுபலி 1 மற்றும் 2 படங்களில் பீட்டர் ஹெய்ன் தான் ஸ்டண்ட் மாஸ்டராக இருந்துள்ளார்.
Abbas Ali Moghul ?? He didn't work for @BaahubaliMovie 1 or 2.. https://t.co/liDtDp2P1T
— Shobu Yarlagadda (@Shobu_) April 13, 2018
இதனால் தேசிய விருது அறிவிப்பில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.