Don't Miss!
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
விருதுகள்
பெர்லின்:
பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் டைரக்டர் மணிரத்னம் இயக்கியஅலைபாயுதே திரைப்படம் திரையிடப்பட்டது.
பெர்லினில் தற்போது 51-வது சர்வதேச திரைப்பட விழா நடந்து வருகிறது. இந்த விழா12 நாட்கள் நடக்கும். இதில் 65 நாடுகளிலிருந்து வரும் 500 திரைப்படங்கள்திரையிடப்படுகின்றன.
இந்த விழாவில் திரையிடப்படுவதற்காக இந்தியாவிலிருந்து 3 திரைப்படங்கள்தேர்ந்தெடுக்கப்பட்டன.
தமிழில் மணிரத்தனம் இயக்கிய அலைபாயுதே திரைப்படமும், மலையாளத்தில்ஜெயராஜ் இயக்கிய காருண்யம் படமும், இந்தியில் எம்.எப்.ஹுசைன் தயாரித்தகஜகாமினி ஆகிய படங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டன. திங்கள்கிழமை இரவு அலைபாயுதே திரைப்படம் திரையிடப்பட்டது.
நிகழ்ச்சி குறித்து விழாவின் ஒருங்கிணைப்பாளர் மார்டில் ஹேடன் கூறுகையில்,இந்தியாவில்தான் அதிக அளவில் திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால்அவை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அளவிற்கான தரமுடன்தயாரிக்கப்படுவதில்லை.
இதன் காரணமாகத்தான் சில ஆண்டுகளாக இந்திய திரைப்படங்கள் சர்வ தேசதிரைப்பட விழாவில் திரையிடப்படவில்லை என கூறினார்.