Don't Miss!
- Finance மத்திய நிதியமைச்சகம் முக்கிய அறிவிப்பு.. அதுவும் எலான் மஸ்க் இந்தியா வரும் நேரத்தில்.. வாவ்..!
- Lifestyle இந்த 4 ராசிக்காரங்க எப்போதும் மற்றவர்களுக்கு ரகசியமாக உதவும் பாதுகாப்பு தேவதைகளாக இருப்பார்களாம்...!
- News நாளை வாக்கு பதிவு: ஸ்டாலின், எடப்பாடி தலைமைக்கு அக்னி பரீட்சை ஏன் தெரியுமா?
- Sports தோனியிடம் கற்க ஒன்றுமில்லை.. முஸ்தஃபிசுர் ரஹ்மானுக்கு அழைப்பு.. வார்த்தையை விட்ட பிசிபி நிர்வாகி!
- Technology எப்படி புதுசு புதுசா யோசிக்கிறாங்க.. Zomato அறிமுகம் செய்த புதிய சேவை.. என்ன தெரியுமா?
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
இந்தியாவையே அசரடித்த பாகுபலிக்கு தேசிய விருது.. செம பொருத்தம்தான்!
சென்னை: தமிழ் மற்றும் தெலுங்கு, இந்தி சினிமா உலகில் கடந்த வருடம் பிரம்மாண்டமாக வெளிவந்து வெற்றிநடை போட்ட "பாகுபலி" படம் சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருதுக்கு தேர்வாகியுள்ளது.
காவியத் தன்மை கொண்ட அரசர்கள் சார்ந்த வரலாற்றுக் கதைகளை பிரம்மாண்டமான திரைப்படங்களாக இந்தியாவாலும் தயாரிக்க முடியும் என்பதைக் காட்டிய திரைப்படம் எஸ்.எஸ்.ராஜ மெளலியின் இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி.
படத்தில் வரும் பிரம்மாண்டப் போர்க்காட்சிக்கான காரணம் எதிர்ப்பார்த்ததுதான். ஆனால் அதைப் பல திருப்பங்களுடன் அருமையான திரைக்கதையாக்கியிருந்தார் ராஜமௌலி.
பிரமிக்க வைத்த போர்க்களம்:
போர்க்களம், நகர அமைப்பு, போர் முதலானவற்றைத் திரையில் காட்சிப்படுத்திய விதம் பிரமிக்க வைப்பதாக அமைந்திருந்தது.
காலகேயர்களின் வியூகம்:
ஒரு லட்சம் வீரர்களைக் கொண்ட காலகேயர்களின் படையை 25 ஆயிரம் வீரர்களைக் கொண்ட மகிழ்மதியின் படை எதிர்கொண்டு வெல்ல அமைக்கும் வியூகமும், அந்த வியூகம் செயல்படும் விதத்தைக் காட்சிப்படுத்திய விதமும் விரிவும் நுணுக்கமும் கொண்டவையாக வடிவமைக்கப்பட்டிருந்தன.
செட்டா? ரீலா?:
நிர்மாணிக்கப்பட்ட செட் எது, கம்ப்யூட்டர் உதவியுடன் உருவாக்கப்பட விர்ச்சுவல் செட் எது என்கிற வேறுபாடுகளைக் கண்டறிய முடியாத சாபு சிரிலின் கலை இயக்கம் அசத்தியிருந்தது.
மகிழ்ச்சிக்குரிய விருது:
ஸ்ரீனிவாஸ் மோகனின் மேற்பார்வையிலான விஷுவல் எஃபெக்ட்டுடன் இணைந்த கலை இயக்கம் என இரண்டு தளங்களுடன் சக்கை போடு போட்ட பாகுபலிக்கு தேசிய விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சிக்குரியதாகும்.