Don't Miss!
- Automobiles என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
'ஏந்திரு அஞ்சலி ஏந்திரு'... மதுவுக்கு எதிராக பாடல் எழுதிய கபிலன் வைரமுத்துவுக்கு விருது!
மதுக் கலாச்சாரத்திற்கு எதிராக பாடல் இயற்றிய கவிஞர் கபிலன் வைரமுத்துவுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: மதுக் கலாச்சாரத்திற்கு எதிராக 'ஏந்திரு அஞ்சலி ஏந்திரு' பாடல் இயற்றிய கவிஞர் கபிலன் வைரமுத்துவுக்கு சிறந்த சமூக சிந்தனையாளருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புரையோடிப்போய் கிடக்கும் மது கலாசாரத்துக்கு எதிராக கவிஞர் கபிலன் வைரமுத்து, 'ஏந்திரு அஞ்சலி ஏந்திரு' எனும் தனிப்பாடலை இயற்றினார். இந்த பாடலை பாலமுரளி பாலு இசையில் டி.ராஜேந்தர் பாடினார். இது நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இந்த பாடலை இயற்றியதற்காக கபிலன் வைரமுத்துவுக்கு சிறந்த சமூக சிந்தனையாளருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 20 வருடங்களாக பல்வேறு சமூக சேவை மற்றும் விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வரும் டிவிஎம் சேவா பாலம் இந்த விருதை அறிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்புக்கான விருதுகளை அந்த அமைப்பு வழங்கி வருகிறது. இந்த ஆண்டு விருது பெறுவோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அதில், கபிலன் வைரமுத்து, எளிய மக்களுக்கான மருத்துவ சேவைக்காக ஸ்டேன்லி அரசு மருத்துவமனையின் முதன்மை மருத்துவர் பொன்னம்பல நமச்சிவாயம், சிறந்த அறுவை சிகிச்சைக்காக மருத்துவர் ரமாதேவி, மகளிர்க்கு பாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் காவல்துறையின் சிலை தடுப்புப் பிரிவு ஆய்வாளர் காஞ்சனா ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.
[ ஆண்ட்ரியாவின் காதல் கனவு நனவானது... 'ஹானஸ்ட்லி' பாடல் சொல்லும் செய்தி! ]
எழுத்தாளர் அய்யாசாமி, ஒளிப்பதிவாளர் செல்லத்துரை, எட்டுத் தோட்டாக்கள் திரைப்பட தயாரிப்பாளர் வெள்ளபாண்டியன் ஆகியோரும் விருது பெறுகிறார்கள். இதற்கான விழா வருகிற அக்டோபர் 2ஆம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெறுகிறது. விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதி R.ஹேமலதா தலைமை விருந்தினராக பங்கேற்கிறார். அயர்லாந்து தூதர் ராஜீவ் மேச்சேரி, மனித நேயர் வரதராஜன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்கிறார்கள்.