Don't Miss!
- Technology AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
- News மோடியின் ரத்த அணுக்களில் "முஸ்லிம் வெறுப்பு".. இனி பாஜக அவ்ளோதான்.. கோபத்துடன் சொன்னது யார் பாருங்க
- Lifestyle எகிப்தியர்கள் ஏன் உலகின் சிறந்த நாகரீகமாக கருதப்படுகிறார்கள் தெரியுமா? இந்த 3 அதிசயங்களே அதற்கு சாட்சி!
- Finance அமெரிக்காவுக்கு பிறக்கும் இந்திய நகை கடைகள்.. சின்ன கல்லு பெத்த லாபம்..!!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Automobiles மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
'ஏந்திரு அஞ்சலி ஏந்திரு'... மதுவுக்கு எதிராக பாடல் எழுதிய கபிலன் வைரமுத்துவுக்கு விருது!
மதுக் கலாச்சாரத்திற்கு எதிராக பாடல் இயற்றிய கவிஞர் கபிலன் வைரமுத்துவுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: மதுக் கலாச்சாரத்திற்கு எதிராக 'ஏந்திரு அஞ்சலி ஏந்திரு' பாடல் இயற்றிய கவிஞர் கபிலன் வைரமுத்துவுக்கு சிறந்த சமூக சிந்தனையாளருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புரையோடிப்போய் கிடக்கும் மது கலாசாரத்துக்கு எதிராக கவிஞர் கபிலன் வைரமுத்து, 'ஏந்திரு அஞ்சலி ஏந்திரு' எனும் தனிப்பாடலை இயற்றினார். இந்த பாடலை பாலமுரளி பாலு இசையில் டி.ராஜேந்தர் பாடினார். இது நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இந்த பாடலை இயற்றியதற்காக கபிலன் வைரமுத்துவுக்கு சிறந்த சமூக சிந்தனையாளருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 20 வருடங்களாக பல்வேறு சமூக சேவை மற்றும் விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வரும் டிவிஎம் சேவா பாலம் இந்த விருதை அறிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்புக்கான விருதுகளை அந்த அமைப்பு வழங்கி வருகிறது. இந்த ஆண்டு விருது பெறுவோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அதில், கபிலன் வைரமுத்து, எளிய மக்களுக்கான மருத்துவ சேவைக்காக ஸ்டேன்லி அரசு மருத்துவமனையின் முதன்மை மருத்துவர் பொன்னம்பல நமச்சிவாயம், சிறந்த அறுவை சிகிச்சைக்காக மருத்துவர் ரமாதேவி, மகளிர்க்கு பாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் காவல்துறையின் சிலை தடுப்புப் பிரிவு ஆய்வாளர் காஞ்சனா ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.
[ ஆண்ட்ரியாவின் காதல் கனவு நனவானது... 'ஹானஸ்ட்லி' பாடல் சொல்லும் செய்தி! ]
எழுத்தாளர் அய்யாசாமி, ஒளிப்பதிவாளர் செல்லத்துரை, எட்டுத் தோட்டாக்கள் திரைப்பட தயாரிப்பாளர் வெள்ளபாண்டியன் ஆகியோரும் விருது பெறுகிறார்கள். இதற்கான விழா வருகிற அக்டோபர் 2ஆம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெறுகிறது. விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதி R.ஹேமலதா தலைமை விருந்தினராக பங்கேற்கிறார். அயர்லாந்து தூதர் ராஜீவ் மேச்சேரி, மனித நேயர் வரதராஜன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்கிறார்கள்.