Don't Miss!
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- News கரும்பு விவசாயி சின்னத்தால் எனக்கு அடி, உதை.. கதறிய கிருஷ்ணகிரி வேட்பாளர்- நாம் தமிழர் மீது புகார்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
நேர்மையாளர்களுக்கு ஏற்ற தொழில் சினிமாதான்!- கமல் ஹாஸன்
சென்னை: நேர்மையாளர்களுக்கு ஏற்ற தொழில் சினிமாதான் என்று நடிகர் கமல் ஹாஸன் கூறினார்.
சினிமா மக்கள் தொடர்பாளர்கள் சங்கம் மற்றும் ‘வி4' அமைப்பு சார்பில் கடந்தாண்டு வெளியான சிறந்த படங்கள் மற்றும் சிறந்த நடிகர்கள்-இயக்குநர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள சோவியத் கலாசார மையத்தில் நடந்தது.
விழாவில், சிறந்த நடிகருக்கான விருதை கமல் ஹாசனுக்கு பட அதிபர் ஏவி.எம்.சரவணன் வழங்கினார். நடிகர்கள் அரவிந்தசாமி, அருண்விஜய், இயக்குநர்கள் சுந்தர்.சி., மணிகண்டன், விக்னேஷ் சிவன், பிரம்மா, ராஜேஷ், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ராமசாமி ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
விழாவில் கமல்ஹாசன் பேசியதாவது:
பள்ளிக்கு போகாத நான், வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் உரையாற்றச் செல்கிறேன். சினிமாவில் நடித்த எனக்கு ஏவி.எம். நிறுவனம் ஒரு முக்கியமான பள்ளிக்கூடமாக அமைந்தது. ‘களத்தூர் கண்ணம்மா' படத்தில் 3 வயது சிறுவனாக அறிமுகமானேன். என்னை ஏவி.எம். ஒரு பிள்ளையாகவே பார்த்துக்கொண்டது.
சினிமா என்பது மிகவும் நல்ல தொழில். சிலர் இந்த தொழிலுக்கு தங்கள் பிள்ளைகள் வரக்கூடாது என்று நினைத்தால் அதை மறுக்க நான் கடமைப்பட்டு உள்ளேன். சினிமாவில் நேர்மையாக தொழில் செய்பவர்கள், தங்கள் குழந்தைகளை இந்த தொழிலில் இறக்கி விடுகிறார்கள். தவறு செய்பவர்கள்தான் தங்கள் பிள்ளைகள் சினிமா தொழிலுக்கு வரக்கூடாது என்று நினைப்பார்கள். நேர்மையாக இருப்பவர்களுக்கு சினிமா ஒரு நல்ல தொழில்.
திறமையான டைரக்டர்கள் பலர் இப்போது வந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் எங்களை விட அதிகமாக ஓடவேண்டும். அப்படி ஓடுவதுதான் எங்கள் வியர்வைக்கு அளிக்கும் மரியாதை. முன்பெல்லாம் சினிமாவில் ஒத்திகை பார்த்துத்தான் நடிப்போம்.
‘தூங்காதே தம்பி தூங்காதே' படத்தில் நடிப்பு-சண்டை போன்றவற்றை ஒத்திகை எடுத்தோம். அது இப்போதும் தொடர்கிறது. ஒத்திகை என்பது எல்லா தொழிலுக்கும் அவசியம்.
இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.
-
Aadujeevitham Review: ஆடு ஜீவிதம் விமர்சனம்.. பாலைவனத்தில் அடிமை வாழ்க்கை.. கண்ணெல்லாம் கலங்குது!
-
சோனியா அகர்வால் பிறந்தநாள்.. அவரது சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?.. சிங்கிளா இருந்தாலும் கெத்துதான்
-
இஷ்டத்துக்கு பேசிய பேரரசு.. மேடையிலேயே தரமான பதிலடி கொடுத்த வெற்றிமாறன்.. செம சம்பவம்