Don't Miss!
- Finance யானைகள் வாழும் காட்டில் எறும்பு ஆட்சி.. வாரன் பஃபெட் ஜீனியஸ் என்பதற்கு இந்த ஒரு விஷயம் போதும்..!
- Automobiles உலகின் பவர்ஃபுல் ஹார்பர் கிரேன் இதுதான்.. எங்கே வேணும்னாலும் நகர்ந்து போகும்.. 300டன்னைகூட அசால்டா தூக்கிரும்!
- Lifestyle Today Rasi Palan 28 March 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பெரிய தொகையை கடனாக கொடுப்பதைத் தவிர்க்கவும்...
- News திரும்பும் ஜெகன்! ஆந்திரா சட்டசபை தேர்தல் பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு! மாஜி அமைச்சர்களுக்கு சான்ஸ்
- Sports ஹர்திக் பாண்டியாவை வேண்டுமென்றே பழிவாங்கினார்களா மும்பை வீரர்கள்.. இப்படி மோசமாக விளையாட முடியுமா?
- Education ஜேஇஇ பிரதானத் தேர்வெழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
- Technology கட்டண உயர்வு.. தூக்கி வாரிய வோடபோன்.. ரூ.202 ரீசார்ஜ்.. 13 ஓடிடி.. 400 சேனல்கள்.. டிவி டூ மொபைல்.. என்ன வருது!
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
சசிகபூருக்கு தாதாசாஹேப் விருது.... அருண் ஜேட்லி மும்பை சென்று வழங்கினார்!
மும்பை: மும்பையில் நடைபெற்ற விழாவில் பழம்பெரும் இந்தி நடிகர் சசிகபூருக்கு தாதாசாஹேப் பால்கே விருதை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி இன்று வழங்கினார்.
நடிகரும், தயாரிப்பாளருமான சசி கபூருக்கு இன்று தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. மே 3ம் தேதி இதுதொடர்பான விழா டெல்லியில் நடந்தது. அப்போது பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. ஆனால் சசி கபூருக்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தால் அவரால் வர முடியவில்லை. இதனால் அவருக்கு பால்கே விருதை தர முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து மும்பைக்கு சென்று இவ்விருதை வழங்க மத்திய அரசு திட்டமிட்டது. அதன்படி இன்று மும்பையில் உள்ள பிரித்வி திரையரங்கில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. சசி கபூரின் குடும்பத்தினர்கள், உறவினர்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் உள்பட பலர் கலந்து கொண்ட இவ்விழாவில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, சசி கபூரிடம் தாதா சாகேப் பால்கே விருதை வழங்கி கவுரவித்தார்.