கிரிஸ்டல் அவார்ட்ஸ் 2020.. தீபிகா படுகோனேவுக்கு வழங்கி..கௌரவிப்பு
Recommended Video
சென்னை : கிரிஸ்டல் அவார்ட்ஸ் 2020 என்ற விருது பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவுக்கு வழங்கப்பட்டது
உலக வர்த்தக ஃபோரம் நிகழ்ச்சி டாவேஸ்சில் நடைபெற்றது. மனநல மற்றும் ஆரோக்கியம் பற்றி தீபிகா அந்த விருது வழங்கும் விழாவில் பேசினார். தனிமை என்றைக்கும் ஒரு தீர்வாகாது. நம்பிக்கை மற்றும் பலம் தான் நிரந்தரம். கவலை மன அழுத்தம் போன்றவற்றை எறிந்து விடுங்கள். மன அழுத்தம் அது ஒரு கொடிய நோய் நம்மை அழித்து விடும்.

நானும் கூட இதனை அனுபவித்து இருக்கின்றேன் பிப்ரவரி 2014 ஆம் ஆண்டு எனக்கு நடந்தது அதில் இருந்து எப்படி வெளிவருவது என்று யோசித்தேன். மன அழுத்தம் நம்மை வேகமாக மாற்றி விடும். நான் அனுபவித்ததால் சொல்கிறேன்.
தி லைவ், லவ், லாப் என்பதை நான் ஆரம்பித்ததன் காரணம் நம்மால் ஒரு உயிர் காப்பாற்ற பட வேண்டும் என்பதால் தான் மன அழுத்ததில் இருந்து அவர்களை விடுபட வைக்க வேண்டும் என்று தான், நான் இதனை செய்தேன் என்றார்.

மேலும் அவர் கூறியதாவது நாம் தனியாக மன அழுத்ததில் இருந்தாலும் நமக்குள் ஒரு நம்பிக்கை வேண்டும் அதில் இருந்து விடுபடுவோம் என்ற தன்னம்பிக்கை தேவை.
நம்பிக்கை மற்றும் தன்னம்பிக்கை இருந்தால் வாழ்க்கையில் பலவற்றை சாதிக்கலாம் என்பதற்கு இவரே உதாரணம் மற்றும் பலரும் இவரை பாராட்டியும் பழித்தும் பேசி உள்ளனர். ஆனால் அவை எல்லாம் தீபிகா தற்போது மாற்றிகாட்டி உள்ளார்.
வாழ்க்கை என்றால் வலிகள் இருக்கும். வலிகள் இருந்தால் தான் வாழ்க்கை இனிக்கும். அது போல மன அழுத்தம் மற்றும் கவலை போன்ற பலவற்றை உதரி தள்ளி விட்டு வாழ்க்கை வாழுங்கள் வாழ்க்கை என்பது வாழத்தானே.


Click it and Unblock the Notifications