Don't Miss!
- Finance 7.50 லட்சம் கோடி ரூபாயை நிதி திரட்டும் மத்திய அரசு.. எதற்காக தெரியுமா..?
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- News "மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Sports ரோகித்.. ரோகித் என கத்திய ரசிகர்கள்.. ஓங்கி ஒரு அடி விட்ட ஹர்திக் பாண்டியா - வீடியோ
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
ஆஸ்கார் ரேஸ்.. களம் இறங்கும் ஒத்த செருப்பு.. பார்த்திபன் டிவிட்
Recommended Video
சென்னை : ஆஸ்காரில் சிறந்த படங்களின் வரிசையில் ஒத்த செருப்பும் இடம் பெற்று இருப்பதாக பார்த்திபன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்
பார்த்திபன் சிறந்த இயக்குனர்களில் ஒருவர். அவர் கடைசியாக இயக்கி இருக்கும் படம் தான் ஒத்த செருப்பு இந்த படம் மக்களிடையே சிறந்த வரவேற்பை பெற்றது .ஒரே ஒரு மனிதன் நடித்த முதல் இந்திய படம் என்கிற பெருமை இந்த படத்திற்கு உண்டு மற்றும் சமீபத்தில் தான் ஒத்த செருப்பு படத்திற்கு ஜீ சினி விருதுகள் வழங்க ப்பட்டது .
ஒத்த செருப்பு படம் ஆஸ்கார் ரேசில் தற்போது களம் இறங்க போவதாக பார்த்திபன் அவரது சமூக வளைத்தலத்தில் கூறியிருந்தார். அதில் ரசூல் பூகுட்டி அனுப்பியதாக கூறி ஆஸ்கார் பெஸ்ட் பிக்சர்ஸ் அஃதாவது சிறந்த படங்கள் என்ற ஐந்து பட வரிசையில் ஒத்த செருப்பும் இடம் பெற்றிருப்பதாக தெரிவித்தார் .
சிறிது இடைவெளி விட்டு சிறந்த சவுண்ட எடிட்டிங் என்ற தலைப்பிலும் ஒத்த செருப்பு இணைந்து இருப்பதாக பார்த்திபன் தகவலை பதிவிட்டார் .முதல் ஒன்றே பெரிய ஆனந்தம் இரண்டாம் ஒன்று பேரானந்தம் என்று ரசிகர்கள் ஆஸ்காரின் இந்த தகவல் உண்மையா என்பதனை தீவிரமாக தேட துவங்கினர் .ஆனால் இதனை பற்றி வேறு யாருக்கும் இதனை பற்றிய தகவல் இணையம் வாயிலாக கிடைக்கவில்லை.
இதற்கு பதிலளித்த இயக்குனர் மற்றும் நடிகரான பார்த்ததிபன் ட்விட்டரில் பதிவிட்டார் ஆஸ்கார் செய்தி பற்றிய லிங்கை தேடிய போது சரியாக சிக்க வில்லை 13ஆம் தேதி முறையான நாமிநேசன்ஸ் வெளியிடுவார்களாம் காத்திருந்து பார்போம் என்று கூறினார்.
இது சட்டென்று ஒரு வருத்தத்தை கொடுத்து இருந்தாலும் .ஆஸ்கார் பட விழாவில் ஒத்த செருப்பு இணைந்து இருப்பது மிக பெரிய மகிழ்ச்சியான விசயம்தான் .அதிகாரபூர்வ தகவல் 13 ஆம் தேதி வரும் வரை காத்திருப்போம் .
ஆஸ்கார் படவிழா உலகில் மிக பெரிய படவிழாவாக பார்க்க படுகிறது .இந்த பட விழாவில் ஒரு இந்திய படம் கலந்து கொள்வதே மிக பெரிய விசயமாக பார்க்கபட்டு வருகிறது . அதையும் தாண்டி சவால்மிக்க பாதைகளில் பல படங்கள் பயணித்து ஆஸ்காருக்கு சென்றிருக்கிறது. அதில் இரு இந்தியர்களான ஏ.ஆர்.ரகுமான் மற்றும் ரசூல் பூகுட்டி வென்றுள்ளனர்.