Don't Miss!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Automobiles "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- News கோதுமை பீர்.. ஒரே ஒரு பீர் பாட்டில் விலை இவ்வளவா? இப்பவே குஷியில் குடிமகன்கள்.. ஆனாலும் "இடிக்குதே"
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
பிரபல பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு அரிவராசனம் விருது... கேரள அரசு அறிவிப்பு!
பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா அரிவராசனம் விருது பெறுகிறார்.
சென்னை: கேரள அரசு சார்பில் பிரபல பின்னணிப் பாடகி பி.சுசீலாவிற்கு அரிவராசனம்
விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் வருகிற 14-ந் தேதி மாலை மகரவிளக்கு பூஜை நடைபெற இருக்கிறது. இதற்காக கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. அப்போது ஒவ்வொரு ஆண்டும் அய்யப்பன் பற்றிய சிறப்புகளைப் பரப்பும் கலைஞர்களைக் கவுரவப்படுத்தும் வகையில் அரிவராசனம் விருது வழங்கி வருகிறது.
அந்தவகையில், இந்த ஆண்டுக்கான அரிவராசனம் விருது பிரபல பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு வழங்கப்படுகிறது. வருகிற 17-ந் தேதி சபரிமலை சன்னிதானத்தில் உள்ள கலையரங்கில் நடைபெறும் விழாவில் இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது. விருதுடன் ரூ.1 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படும்.
இந்த தகவலை கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கங்கை அமரன் போன்றோரும் அரிவராசனம் விருதை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.