Don't Miss!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Finance முதல்ல மகன், இப்போ அம்மா.. காங்கிரஸ் விட்டு விலகிய சாவித்ரி ஜிண்டால்..!!
- News சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு பாஜகவின் நடிகர் எஸ்.வி.சேகர் திடீர் ஆதரவு? பரபர ட்வீட்!
- Technology வெளுத்துக்கட்டுது சேல்.. ரூ.21,000 போதும்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 67W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
ராஜாவிற்கு ராஜா விருது வழங்கி கவுரவப்படுத்தியது கேரளா அரசு
கேரளா : இசை என்றால் ராஜா ராஜா என்றால் இசை பண்ணைபுரத்தில் பிறந்து இன்று உலகமே கொண்டாடும் உன்னதமான கலைஞன் தான் இசைஞானி இளையராஜா . இவர் செய்த சாதனைகள் பல பெற்று விருதுகளும் பல.
1975 ஆம் ஆண்டுகளில் தமிழகத்தில் இந்தி திரையுலக பாடல்கள் அதிகம் ஒலித்தன. இதனை மாற்றி தமிழகத்தில் தமிழ் பாடல்களை கேட்க செய்தவர் தான் இளையராஜா. ஒரு இசை உலகில் எவரும் செய்ய முடியாத சாதனையை இவர் படைத்தார். சுமார் 1000 படங்களுக்கு இசை அமைத்து சாதனை படைத்துள்ளார் இசைஞானி. பல இந்திய மொழிகளில் இசை அமைத்துள்ளர் . தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம், இந்தி,மாராத்தி,பஞ்சாபி என அடிக்கி கேடே போகலாம் .
இவர் சிறந்த இசைக்கான தேசிய விருதை மூன்று முறை பெற்றுள்ளார்.
மற்றும் சிறந்த பின்னணி இசைக்கான விருதை இரண்டு முறை பெற்றுள்ளார்.
இந்தியாவின் உயரிய விருதான
பத்ம பூஷன் விருதை 2010 ஆம் ஆண்டு பெற்றார் மற்றும் பத்ம விபூஷன் விருதை கடந்த 2018 ஆம்ஆண்டு பெற்றார்.
வாழ்நாள் சாதனையாளர் விருதை இளையராஜா 2015 ஆம் ஆண்டு இன்டர்நேஷனல் பிலிம் பேஸ்டிவல் இந்திய வில் நடைபெற்றது அதில் இவருக்கு வழங்கப்பட்டது.மற்றும் கேரளா மாநிலத்தின் விருதை மூன்று முறை பெற்றுள்ளார் மற்றும் ஆந்திரா
மாநிலத்தின் உயரிய விருதான நந்தி விருதையும் பெற்றுள்ளார் இளையராஜா.
விருதுகள் மற்றும் பாராட்டுக்கள் இவருக்கு புதிதல்ல.தற்போது கூட கேரளா அரசு இவருக்கு அங்கு வழங்கும் உயரிய விருதான ஹரிவராசனம்
விருது கேடயம் வழங்கி கவுரவித்தது. விருது உடன் இவருக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இவ்விருது இதற்கு முன்பு பி.சுசீலா மற்றும் கே.ஜே. ஜேசுதாஸ் மற்றும் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் போன்றவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மத நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக்காக அதிக பங்களிப்பு அளித்தவர்களுக்கு ஹரிவராசனம் விருதை கேரளா அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது. 2020-க்கான விருது இளையராஜாவுக்கு வழங்கப்பட்டது. சபரிமலை சன்னிதானத்தில் வைத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது வழங்கப்பட்டது என்பது பெருமையான விஷயம் . இதே நிகழ்ச்சியில் இளையராஜாவுக்கு 'வணக்கத்துக்குரிய இசைஞானி' என்ற பட்டமும் வழங்கப்பட்டது.