Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
உலகெங்கும் ஒலிக்கிறது சூர்யாவின் ஜெய்பீம்.. மெல்போர்ன், சீனா என தொடரும் சர்வதேச அங்கீகாரம்!
சென்னை: இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படத்திற்கு சர்வதேச அளவில் அங்கீகாரங்கள் தொடர்ந்து கிடைத்து வருகின்றன.
ஆஸ்கர் விருது போட்டிக்கு அனுப்பப்பட்ட ஜெய்பீம் திரைப்படம் ஆஸ்கர் யூடியூப் சேனலில் இடம்பெற்று சாதனை படைத்தது.
இந்நிலையில், தற்போது மெல்போர்ன், சீனா என அடுத்தடுத்து சர்வதேச அங்கீகாரங்கள் கிடைத்துள்ளன.
ஜெய் பீம் வழக்கு.. சூர்யா மீது கடும் நடிவடிக்கை வேண்டாம்..சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
விருது நாயகன் சூர்யா
சூரரைப் போற்று திரைப்படத்துக்காக தேசிய விருது வென்றார் நடிகர் சூர்யா. ஒட்டுமொத்தமாக அந்த படத்திற்கு 5 தேசிய விருதுகள் கிடைத்தன. இந்நிலையில், அடுத்த ஆண்டு ஜெய்பீம் திரைப்படத்துக்காகவும் பல தேசிய விருதுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், வெளிநாடுகளில் நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படத்துக்கு அங்கீகாரங்கள் தொடர்ந்து கிடைத்து வருகின்றன.
ஆஸ்கர் வரை அங்கீகாரம்
கோல்டன் குளோப், ஆஸ்கர் விருதுகள் என சூர்யாவின் சூரரைப் போற்று மற்றும் ஜெய்பீம் திரைப்படங்கள் போட்டிக்கு அனுப்பப்பட்டன. இந்த ஆண்டு ஆஸ்கர் விருது சூர்யாவின் ஜெய்பீம் படத்துக்கு கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பரிந்துரைப் பட்டியலில் கூட அந்த படம் வர தவறியது. ஆனாலும், ஆஸ்கர் யூடியூப் சேனலில் ஜெய்பீம் காட்சிகளை வெளியிட்டு இருந்தனர். மேலும், ஆஸ்கர் குழுவில் இருக்கும் சிலர் ஜெய்பீம் படம் ஆஸ்கர் வெல்லத் தகுதியான படம் என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தனர்
மெல்போர்னில் திரையிடல்
அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படம் தற்போது ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் அடுத்த மாதம் நடைபெற உள்ள இந்திய திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. சிவாஜியின் பராசக்தி படமும் டாப்ஸியின் விரைவில் வெளிவர உள்ள டோபாரா திரைப்படமும் திரையிடப்படுகிறது. இந்த விழா ஆகஸ்ட் 12ம் தேதி தொடங்கி 20ம் தேதி வரை நடைபெறுகிறது.
சீனாவில் விருது
12வது சர்வதேச பெய்ஜிங் திரைப்பட விழாவில் வழங்கப்படும் டியாண்டன் விருதுக்கு சூர்யாவின் ஜெய்பீம் விருது தேர்வு செய்யப்பட்டுள்ள அறிவிப்பும் தற்போது வெளியாகி சூர்யா ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. தமிழ் சினிமாவில் தற்போது அதிகளவில் சர்வதேச அங்கீகாரத்தை அள்ளி வரும் நடிகராக சூர்யா திகழ்வது குறிப்பிடத்தக்கது.