கமல் - வைரமுத்துவுக்கு பத்மபூஷண் விருது - குடியரசுத் தலைவர் வழங்கினார்
டெல்லி: நடிகர் கமல்ஹாஸன், கவிஞர் வைரமுத்து ஆகியோருக்கு இன்று 2014-ம் ஆண்டுக்கான பத்மபூஷண் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்.
நடிகர் கமல் ஹாசன் மற்றும் வைரமுத்துவுக்கு 2014 ஆம் ஆண்டிற்கான பத்ம பூஷன் விருது வழங்கப்படுவதாக கடந்த ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான விழா இன்று டெல்லியில் நடைபெற்றது.

குடியரசுத்லைவர் பிரணாப் முகர்ஜி இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 2014 ஆம் ஆண்டுக்கான விருதுகளுக்கு தேர்வானவர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
அதன்படி கமலஹாசனுக்கு பத்ம பூஷன் விருதை பிரணாப் வழங்கினார். கவியரசு வைரமுத்துவுக்கும் இவ்விழாவில் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.
Comments


Click it and Unblock the Notifications