Don't Miss!
- Technology AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
- News மோடியின் ரத்த அணுக்களில் "முஸ்லிம் வெறுப்பு".. இனி பாஜக அவ்ளோதான்.. கோபத்துடன் சொன்னது யார் பாருங்க
- Lifestyle எகிப்தியர்கள் ஏன் உலகின் சிறந்த நாகரீகமாக கருதப்படுகிறார்கள் தெரியுமா? இந்த 3 அதிசயங்களே அதற்கு சாட்சி!
- Finance அமெரிக்காவுக்கு பிறக்கும் இந்திய நகை கடைகள்.. சின்ன கல்லு பெத்த லாபம்..!!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Automobiles மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
கானல் நீருக்கு கிடைக்குமா ஆஸ்கர் விருது?
சென்னை: உலகின் முதல் தொண்டு படம் கானல் நீர் ஆகஸ்ட் 30 அன்று வெளியாகிறது. பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் எம்.பத்மகுமாரின் கானல் நீர் திரைப்படம் ஆகஸ்ட் 30 ஆம் தேதி தமிழ்நாட்டில் வெளியிடப்பட உள்ளது.
இந்த படம் சல சலப்பான ஒரு நகரத்தில் வீடற்ற ஒரு பெண் மற்றும் அவரது குழந்தையின் போராட்டங்களை சித்தரிக்கும் வகையில் எடுக்கப் பட்டுள்ளது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய நபர்களின் இதயங்களை வென்றுள்ளது.
முக்கிய கதாபாத்திரத்தில் வெயில் உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாக நடித்த பிரியங்கா நாயர் நடிக்கிறார். நடிகர் ஹரீஷ் பேராடியும் (ஆண்டவன் கட்டளை புகழ்) இந்த படத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
டி.எஸ்.சுரேஷ் பாபு திரைக்கதை மற்றும் சோஹன் ராய் இந்த படத்தை தயாரித்துள்ளனர். இந்த படம் உலகின் முதல் தொண்டுக்கான படம் மற்றும் CSR படங்கள் பிரிவின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் ஆஸ்கார் விருதுகளில் சிறந்த படங்களுக்கான பிரிவில் பரிந்துரைக்கப்படுவதற்கும் போட்டியிடுகிறது.
அதாவது இத் திரைப்படத்தின் முழுமையான லாபமும் நிலமற்ற மக்களின் மறுவாழ்வுக்காகவும், பெண்கள் முன்னேற்றத்திற்கு ஆதரவளிப்பதற்காகவும் பயன்படுத்தப்படும்.
இந்தியாவின் கொச்சியில் ஒரு பாலத்தின் கீழ் தங்க வாழும் ஒரு குடும்பத்தைப் பற்றி மிகவும் பிரபலமான ஒரு இந்திய நாளிதழில் எழுதப் பட்ட கட்டுரையை அடிப்படையாகக் கொண்டது கானல் நீர். நிலமற்ற மக்கள் பலர் பாலியல் துஷ்பிரயோகத்தை தவிர்ப்பதற்காக, நகரவாசிகளிடமிருந்து தங்கள் பெண்களைப் பாதுகாக்க தங்குமிடங்களைத் தேடுகின்றனர். இந்த திரைப்படம் நாட்டில் நடக்கும் நிலப் போராட்டங்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது, இது அதிகாரிகளின் புறக்கணிக்கப்பையும், இந்தியாவில் நிலவும் சிவப்பு-தட்டுப்பாட்டையும், தேவைப்படுபவர்களுக்கு ஒரு உதவியை வழங்க அதிகாரத்துவம் தவறியதையும் பிரதிபலிக்கிறது.
இந்த திரைப்படம் பல சர்வதேச மற்றும் தேசிய திரைப்பட விழாக்களில் தேர்வு செய்யப்பட்டு திரையிடப்பட்டு பாராட்டுக்களைப் பெற்றது.
மொத்தத்தில் கமர்சியல் படங்களுக்கான எந்த வரையறையும் இல்லாமல் புதிய முயற்சியாக எடுக்கப் பட்டுள்ளது. ஏற்கனவே 1961 மற்றும் 2007 ஆகிய ஆண்டுகளில் கானல் நீர் என்ற தலைப்பில் திரைப்படங்கள் எடுக்கப் பட்டுள்ளன. இது மூன்றாவது முறையாக கானல் நீர் என பெயரிட்டு முதல் ஆஸ்காரை பெற்று தருமா என பார்ப்போம்.
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
-
Pandian stores 2: குமரனை சம்பவம் செய்ய ஒன்றுசேரும் சகோதரர்கள்.. தடுக்க பரிதவிக்கும் பழனிவேல்!