Don't Miss!
- News ரூ 4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை.. மே 2ல் காவல் துறையில் ஆஜராவேன்.. நயினார் நாகேந்திரன்
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம், இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சிறந்த நடிகர் துல்கர் சல்மான்; சிறந்த நடிகை பார்வதி.. கேரள அரசு விருதுகள் அறிவிப்பு
2015-ம் ஆண்டுக்கான கேரள மாநில திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன.
சிறந்த நடிகராக துல்கர் சல்மானும் (சார்லி), சிறந்த நடிகையாக பார்வதியும் (என்னு நிண்டே மொய்தீன்) தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
சார்லி படத்தின் இயக்குநர் மார்டின் பிரகாத் சிறந்த இயக்குநராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சிறந்த படமாக சணல்குமார் சசிதரன் இயக்கிய ஒளிவு திவசத்தே களி தேர்வாகியுள்ளது. சிறந்த மலையாள படத்துக்கான இன்னொரு விருது, ‘அமீபா' படத்துக்கு வழங்கப்படுகிறது.
சிறந்த இசையமைப்பாளர் விருது ரமேஷ் நாராயணுக்குக் கிடைத்துள்ளது.
சார்லி, நிண்டே மொய்தீன் ஆகிய படங்கள் அதிக விருதுகளைப் பெற்றுள்ளன.
சிறந்த நடுவர் விருதுக்கு நடிகர் ஜெயசூர்யா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இசை அமைப்பாளராக ரமேஷ் நாராயணன் (இடவபாதி, என்னு நின்டே மொய்தீன்), பாடகராக பி.ஜெயச்சந்திரன் (என்னு நின்டே மொய்தீன், ஜிலேபி), பாடகியாக மது நாராயணன் (இடவபாதி), ஒளிப்பதிவாளராக ஜோமோன் டி ஜான் (சார்லி, என்னு நின்டே மொய்தீன்), பாடலாசிரியராக ரபீக் அஹமத் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சிறந்த குணச்சித்ர நடிகராக ‘நிர்நாயகம்' படத்தில் நடித்த பிரேம் பிரகாசும், சிறந்த குணசித்ர நடிகையாக ‘பெண்' படத்தில் நடித்த அஞ்சலியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.